பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்835

 

மறித்து இவண்வந்திலர்; மாண்டுளார்கொலோ ?
பிறித்துஅவர்க்கு உற்றுளது என்னை ?-
                              பெற்றியோய் !’

     பெற்றியோய் -நற்பண்புடையவனே !; வெறிகரும் குழலியை தென்
திசை நாடல் மேயினார் -
நறு மணம் உள்ள கரிய கூந்தலை உடைய
சீதையை தெற்குத் திசையில் தேடுதலை மேற்கொண்டு சென்ற அனுமன்
முதலிய வானர வீரர்கள்; குறித்த நாள் இகந்தன குன்ற - நாம் குறிப்பிட்டுக்
கூறிய தவணை நாட்கள் கடந்தன; நாள் கடந்து தேயவும்; இவண்மறித்து
வந்திலர் -
இங்கு திரும்பி வந்தாரல்லர்; அவர்க்கு - தேடச் சென்ற
அவ்வானர வீரர்க்கு; பிறிது உற்றுளது என்னை ? - வேறு என்ன
நேர்ந்துள்ளது ?; மாண்டுளார் கொலோ ? - இறந்து போயினார்களோ ?

     குறித்தகாலத்துக்குள், தென் திசை சென்றவர்கள் வராததனால்;
மாண்டுவிட்டனரோ என்று ஐயமுறுகின்றான் இராமபிரான். ‘பிறிது’ என்பது
எதுகை நோக்கி பிறித்து என நின்றது; செய்யுள் விகாரம்.             (17)

6024.

‘மாண்டனள்அவள்; “இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்குஉரைத்தலின், விளிதல் நன்று”
                                    எனா,
பூண்டது ஓர் துயர்கொடு பொன்றினார்கொலோ ?
தேண்டினர்,இன்னமும் திரிகின்றார்கொலோ ?

     அவள் மாண்டனள்- (அதுவன்றி) அச்சீதை இறந்து விட்டாள்; இவள்
மாண்ட வார்த்தையை மீண்டு அவர்க்கு உரைத்தலின் -
‘இந்த சீதா
பிராட்டி இறந்த செய்தியைத் திரும்பிச் சென்று அந்த இராமபிரான்
முதலியவர்களுக்குச் சொல்லுவதிலும்; விளிதல் நன்று எனா - நாம் இறந்து
போதலே நல்லது’ என்று எண்ணி; பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்
கொலோ? -
மேற்கொண்டதொரு துன்பத்தினால் (அவ்வனுமன் முதலானோர்)
இறந்தார்களோ ?; இன்னமும் தேண்டினர் திரிகின்றார்களோ ? - (அன்றி)
இன்னும், தேடினவர்களாய் வேறுபல இடங்களிலும் அலைகின்றார்களோ ?.

      இராமபிரான்ஐயப்பாடு, மேலும் நீளுகின்றது.               (18)

6025.

‘கண்டனர்அரக்கரை, கறுவு கைம்மிக,
மண்டு அமர்தொடங்கினார், வஞ்சர் மாயையால்