பக்கம் எண் :

836சுந்தர காண்டம்

 

விண்தலம்அதனில் மேயினர்கொல் ? வேறு இலாத்
தண்டல் இல்நெடுஞ் சிறைத் தளைப்
                          பட்டார்கொலோ ?

     அரக்கரைக்கண்டனர் - (சீதையை எடுத்துச்சென்ற இராவணன்
முதலிய) அரக்கர்களைப் பார்த்து; கறுவு கைம்மிக மண்டு அமர்
தொடங்கினார் -
கோபம் அதிகரிக்க, மிகுதியான போரைச் செய்யத்
தொடங்கி; வஞ்சர் மாயையால் விண்தலம் அதனில் மேயினார் கொல் ?
-
வஞ்சகச் செயலுடைய அவ்வரக்கர்களின் மாயச்  செயலால் (இறந்து)
வீரசுவர்க்கத்தில் சென்று சேர்ந்தார்களோ ?; தண்டல் இல்
நெடுஞ் சிறை தளைப்பட்டார் கொலோ ? -
(எக்காலத்திலும்) நீங்குதல்
இல்லாத பெரிய சிறையில் கட்டுப்பட்டார்களோ ?

     ஓ: அசை.                                            (19)

6026.

‘ “கூறின நாள், அவர் இருக்கை கூடலம்;
ஏறல் அஞ்சுதும்”என, இன்ப துன்பங்கள்
ஆறினர், அருந்தவம் அயர்கின்றார்கொலோ ?
வேறு அவர்க்குஉற்றது என் ? விளம்புவாய் !’
                                  என்றான்.

     கூறின நாள் அவர்இருக்கை கூடலம் -  (நமக்குத் தவணையாகக்
குறிப்பிட்டுச்) சொன்ன நாட்களுள் இராமன் முதலியோர் இருப்பிடத்தைச்
சேர்ந்தோமில்லை; ஏறல்  அஞ்சுதும்  என  -  இனி  அங்கு  சென்று
சேரும்   செயலுக்குப் பயப்படுகின்றோம் என்று தீர்மானித்து; இன்ப
துன்பங்கள் ஆறினர் -
இன்ப துன்ப உணர்ச்சிகளினின்றும் நீங்கியவர்களாய்;
அருந்தவம் அயர்கின்றார் கொலோ - அரிய தவத்தில் ஈடுபட்டு
மற்றவற்றை மறந்தார்களோ ?; அவர்க்கு வேறு உற்றது என் ? - அந்த
வீரர்களுக்கு வேறே நேர்ந்தது யாதோ ?; விளம்புவாய் என்றான் -
‘சொல்வாயாக’ என்று (இராமபிரான் சுக்கிரீவனைப்) பார்த்துக் கேட்டான்.

    குறித்த காலம் கடந்ததனால், மீண்டும் இராமன் இருக்கும் இடத்துக்கு
வருதற்கு அஞ்சி, வானர வீரர்கள் தவத்தை மேற்கொண்டனரோ என்பதும்
இராமபிரான் உள்ளத் தெழுந்த ஒரு ஐயம் ஆகும்.                (20)