சீதா பிராட்டிகற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கின்றாள் என்ற உண்மையை, இராமபிரான் முதலில் அறிந்து கொள்வதற்காக, அனுமன் தென் திசை நோக்கி வணங்கி, வாழ்த்தினான் என்க. மொய் - வலிமை; சீதை, திருமகளின் அவதாரம் என்பதை முளரி நீங்கிய தையல்’ என்ற தொடர் காட்டுகின்றது. (22) செய்தி உணர்ந்தஇராமபிரான் மகிழ்தல் | 6029. | திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்; ‘வண்டு உறைஓதியும் வலியள்; மற்று இவன் கண்டதும் உண்டு;அவள் கற்பும் நன்று’ எனக் கொண்டனன்,குறிப்பினால் உணரும் கொள்கையான். |
குறிப்பினால்உணரும் கொள்கையான் - அவயவங்களின்குறிப்பைக் கொண்டு நடந்ததை நன்கு உணர்ந்து கொள்ளும் நுண்ணறிவினனான இராமபிரான்; திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் - மிக்க வலிமை உடைய அந்த அனுமனது செய்கையை நன்றாகப் பார்த்து அறிந்து; வண்டு உறை ஓதியும் வலியள் - வண்டுகள் தங்கும் கூந்தலை உடைய பிராட்டியும் நன்னிலையில் உறுதியுடன் இருக்கின்றாள்; இவன் கண்டதும் உண்டு - இவ்வனுமன் அவளை நேரில் பார்த்து வந்ததும் உண்டு; அவள் கற்பும் நன்று என கொண்டனன் - அவளது கற்பும் சிறப்புடையதாயிருக்கின்றது என்று ஊகித்துக் கொண்டான். அனுமன் தென் திசைநோக்கித் தொழுத செய்கையிலிருந்து, இராமபிரான்உணர்ந்து கொண்ட பிராட்டியின் நிலை பற்றிப் பேசப்பட்டது என்க. (23) | 6030. | ஆங்கு அவன்செய்கையே அளவை ஆம் எனா, ஓங்கியஉணர்வினால், விளைந்தது உன்னினான்; வீங்கின தோள்;மலர்க் கண்கள் விம்மின; நீங்கியது அருந்துயர்; காதல் நீண்டதே. |
ஆங்கு அவன்செய்கையே - (இராமபிரான்)அவ்விடத்தில் அனுமன் செய்த குறிப்பான செயலே; அளவை ஆம் எனா - பிராட்டியின் நன்னிலையை அறிந்து கொள்வதற்கு அளவு கருவியாகும் என்று; ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான் - சிறந்த (தனது குறிப்பறியவல்ல) அறிவினால் அங்கு |