பக்கம் எண் :

84சுந்தர காண்டம்

 

காயம் என்னும் அக் கணக்கறு பதத்தையும் கடக்க
ஏயும் நன்மதில்இட்டனன் - கயிலையை எடுத்தான்.

     கயிலையைஎடுத்தான் - கயிலையைப் பெயர்த்துஎடுத்த இராவணன்;
தேவர் - தேவர்கள்; தீய செய்குநர் - தீமையைச் செய்பவர்கள்;
அனையவர் - அந்தத் தேவர்கள்; சேரும் - இலங்கையை அடையும்;
வாயில் இல்லது - வழியே இல்லாத; ஓர் வரம்பு அமைக்குவென் - ஒரு
தடையை அமைப்பேன்; என - என்று; மதியா - ஆலோசித்து; காயம்
என்னும் -
ஆகாயம் என்று கூறப்பெற்ற; அக்கணக்கறு பதத்தையும் -
அந்த முடிவற்ற மண்டலத்தையும்; கடக்க - தாண்டி அப்பாற்
செல்லும்படியாக; ஏயும் - பொருந்திய; நன்மதில் இட்டனன் - நல்ல மதிலை
(இலங்கைக்கு) அமைத்தான்.

     வரம்பு - தடை.காதளவு வருவன, கடப்பன ஆகல் ஆகாது என இட்ட
வரம்பு (தக்க - பரணி - 132உரை)

    “ஏயும் நன்மதில்எடுத்தனன் கயிலையன்று எடுத்தான்’ என்னும் பாடம்
கட்டுரைச் சுவைபடவுள்ளது ஆல் - அசை. ஆகையினாலே என்று பொருள்
கூறினும் பிழையில்லை.                                     (22)

4857. 

கறங்குகால்புகா; கதிரவன் ஒளிபுகா; மறலி
மறம் புகாது; இனிவானவர் புகார் என்கை வம்பே !
திறம்புகாலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது,இந்தஅணி மதிள் கிடக்கை நின்று
                                 அகத்தின் !*

     இந்த - ; அணி -அழகிய;மதிள் கிடக்கை நின்று - மதிளின்
பரப்பிலிருந்து; அகத்தின் - இலங்கைக்குள்ளே; கறங்கு கால் புகா - சுழன்று
வீசும் காற்றுகள் நுழையா; கதிரவன் ஒளி புகா - சூரியனின் வெப்பக்கதிர்கள்
நுழையா; மறலி மறம் புகாது - யமனுடைய கொலைத்தொழில் நுழையாது;
இனி - இனிமேல்; வானவர் புகார் என்கை - தேவர்கள் (போர் செய்ய
எண்ணி) நுழையார் என்று கூறுதல்; வம்பே - வீண் மொழியாகும்; திறம்பு
காலத்துள் -
(பொருள்யாவும் மாறுபடும்) ஊழிக்காலத்தில்; யாவையும்
சிதையினும் -
எல்லாம் அழிந்தாலும்; சிதையா - விகாரம் அடையாத; அறம்
-
அறக்கடவுள்; புகாது - நுழையாது.