பக்கம் எண் :

846சுந்தர காண்டம்

முட்டை கீண்டிலது -பிரமன்படைத்த உலகம், பிளந்து போகவில்லை;
அனந்தன் உச்சி கிழிந்திலது -
ஆதிசேடனது தலைகளோடு கூடிய படம்
கிழிந்து போகவில்லை; வேலை எழுந்து மீண்டில - கடல்கள் பொங்கி மேல்
வந்தனவில்லை; சுடர்கள் யாவும் விழுந்தில - சூரியன் சந்திரன் முதலிய
ஒளியுள்ள நட்சத்திரங்கள் யாவும் கீழே விழுந்து அழியவில்லை; வேதம்
செய்கை மாண்டிலது -
வேதங்களும் அவற்றில் கூறப்பட்டுள்ள
ஒழுக்கங்களும் அழிந்தனவல்ல; என்னும் தன்மை வாய்மையால் உணர்தி -
என்கின்ற இத்தன்மை மெய்யாயிருத்தலை நோக்கி, (அதனால்) உணர்வாயாக.

     வாய்மை,வாய்மையால் உணர்தி’ என இயையும், இராவணன்
பிராட்டியைத் தீண்டிலன் என்னும் வாய்மை கடல்கள் எழுந்து பொங்காமை
முதலியவற்றால் அறியக்கிடக்கும். பிராட்டியின் புனிதத் தன்மையால்தான்,
இயற்கை நிகழ்ச்சிகள் மாறுபடாமல் நிற்கின்றன என்று கூறப்பட்டது.      (33)

6040.

‘சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு
                          ஒத்த
மாகத்தார்தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்;
                          மற்றைப்
பாகத்தாள்,இப்போது ஈசன் மகுடத்தாள்;
                         பதுமத்தாளும்,
ஆகத்தாள்அல்லள், மாயன் ஆயிரம் மௌலி
                          மேலாள்.

     சோகத்தாள் ஆயநங்கை - (உன்னைப் பிரிந்த பெரும்) துக்கத்தை
உடையவளான பிராட்டியின்; கற்பினால் மாகத்தார் தேவி மாரும் - கற்பின்
சிறப்பால், வானில் உள்ள தேவர்களி்ன் மனைவிமார்களும்; தொழுதற்கு ஒத்த
வான் சிறப்பு உற்றார் -
யாவரும் வணங்குவதற்கு ஏற்ற பெரும்சிறப்பை
அடைந்தார்; மற்றை ஈசன் பாகத்தாள் இப்போது மகுடத்தாள் -
அதுவல்லாமல் சிவபிரானது உடம்பின் ஒரு பாகத்தில் இருக்கும் உமாதேவி,
இந்த சமயத்தில் அப்பெருமானது தலைமேல் இருக்கும் சிறப்பினை
உடையவளானாள்; பது மத்தாளும் - தாமரை மலரில் வீற்றிருக்கும்
திருமகளும்; மாயன் ஆகத்தாள் அல்லன் - இனித் திருமாலின் திருமார்பில்
வீற்றிருக்கத் தக்கவள் அல்லள்