| இன்னது என்றுஅறிகிலாமே, இத்தனை தாழ்த்தது” என்றே, மன்ன ! நின்வருத்தப்பாடும் உணர்த்தினென்; உயிர்ப்பு வந்தாள். |
மன்ன ! -தலைவனே!; அடியனேன் நின் பிரிந்தபின் அடுத்த எல்லாம் அன்னவர்க்கு சொல்முறை அறிய சொல்லி - அடியவனாகிய நான் உன்னைப் பிரிந்த பிறகு நேர்ந்த செய்திகளை எல்லாம் பிராட்டியார்க்குச் சொல்லும் முறைமையால் அறியும்படிச் சொல்லி; தோகை நீ இருந்த சூழல் இன்னது என்று அறிகிலாமே - மயில் போன்றவளே ! நீ இருந்த இடம் இன்ன இடத்தது என்று தெரியாமையினாலேயே; இத்தனை தாழ்த்தது என்று - இத்தனை காலம் நீட்டித்தது என்றும் சொல்லி; நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் - (பிராட்டியைப் பிரிந்ததனால்) நீ வருத்தப்படும் தன்மையையும் தெரியச் சொன்னேன்; உயிர்ப்பு வந்தாள் - (அது கேட்டு) மூச்சு விடுதல் உற்றாள். பிராட்டியைஇராமபிரான் அதுவரை வந்து காணாமைக்குக் காரணம் கூறப்பட்டது. (44) 6051. | ‘இங்கு உளதன்மை எல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள்; அங்கு உள தன்மைஎல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள்; “திங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம் தீர்ந்தபின்னை, மங்குவென்உயிரோடு” என்று, உன் மலரடி சென்னி வைத்தாள். |
இங்கு உள தன்மைஎல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள் - இவ்விடத்தில் உள்ளனவான நிலைமைகள் எல்லாவற்றையும் நடந்தபடியே (நிகழ்ந்த முறையில்) பொருந்தக் கேட்டு; அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள் - அவ்விடத்தில் உள்ள நிலைமைகளை எல்லாம், அடியவனாகிய எனக்குத் தெரிந்து கொள்ளும்படி விளக்கமாகக் கூறினாள்; இன்னே திங்கள் ஒன்று இருப்பென் - (மேலும்) இந்த இடத்தில் ஒரு மாத காலம் உயிர் வைத்திருப்பேன்; திருவுளம் தீர்ந்த பின்னை - (அதற்குள் |