பக்கம் எண் :

854சுந்தர காண்டம்

 

இன்னது என்றுஅறிகிலாமே, இத்தனை தாழ்த்தது”
                          என்றே,
மன்ன ! நின்வருத்தப்பாடும் உணர்த்தினென்;
                          உயிர்ப்பு வந்தாள்.

     மன்ன ! -தலைவனே!; அடியனேன் நின் பிரிந்தபின் அடுத்த
எல்லாம் அன்னவர்க்கு சொல்முறை அறிய சொல்லி -
அடியவனாகிய
நான் உன்னைப் பிரிந்த பிறகு நேர்ந்த செய்திகளை எல்லாம் பிராட்டியார்க்குச்
சொல்லும் முறைமையால் அறியும்படிச் சொல்லி; தோகை நீ இருந்த சூழல்
இன்னது என்று அறிகிலாமே -
மயில் போன்றவளே ! நீ இருந்த இடம்
இன்ன இடத்தது என்று தெரியாமையினாலேயே; இத்தனை தாழ்த்தது என்று
-
இத்தனை காலம் நீட்டித்தது என்றும் சொல்லி; நின் வருத்தப்பாடும்
உணர்த்தினென் -
(பிராட்டியைப் பிரிந்ததனால்) நீ வருத்தப்படும்
தன்மையையும் தெரியச் சொன்னேன்; உயிர்ப்பு வந்தாள் - (அது கேட்டு)
மூச்சு விடுதல் உற்றாள்.

     பிராட்டியைஇராமபிரான் அதுவரை வந்து காணாமைக்குக் காரணம்
கூறப்பட்டது.                                              (44)

6051. 

‘இங்கு உளதன்மை எல்லாம் இயைபுளி இயையக்
                                  கேட்டாள்;
அங்கு உள தன்மைஎல்லாம் அடியனேற்கு அறியச்
                                  சொன்னாள்;
“திங்கள் ஒன்றுஇருப்பென் இன்னே; திரு உளம்
                                தீர்ந்தபின்னை,
மங்குவென்உயிரோடு” என்று, உன் மலரடி சென்னி
                                வைத்தாள்.

     இங்கு உள தன்மைஎல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள் -
இவ்விடத்தில் உள்ளனவான நிலைமைகள் எல்லாவற்றையும் நடந்தபடியே
(நிகழ்ந்த முறையில்) பொருந்தக் கேட்டு; அங்கு உள தன்மை எல்லாம்
அடியனேற்கு அறியச் சொன்னாள் -
அவ்விடத்தில் உள்ள நிலைமைகளை
எல்லாம், அடியவனாகிய எனக்குத் தெரிந்து கொள்ளும்படி விளக்கமாகக்
கூறினாள்; இன்னே திங்கள் ஒன்று இருப்பென் - (மேலும்) இந்த இடத்தில்
ஒரு மாத காலம் உயிர் வைத்திருப்பேன்; திருவுளம் தீர்ந்த பின்னை -
(அதற்குள்