பக்கம் எண் :

866சுந்தர காண்டம்

 

உரம் உறு வனமுலை வெரிநின் மூன்று உளார்;
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார்.

     திருக்கு - கண்கள்.வெரிந் - முதுகு.                      (55-1)

406.

என்னவாழ்த்திய மாருதி, ‘ஈது நாம்
இன்னும்காண்டும்’ என, மறைந்து எய்தினான்;
சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும்
அன்னை வைகுறும்அவ் இடத்து ஆயினான்.

     அரக்கன் -இராவணன்.                              (101-1)

407.

‘இன்று நாளைஅருளும் திருவருள்
என்று கொண்டு,இதனால் அழிவேனை நீ
கொன்று இறந்தனைகூடுதியோ ? குழை
தின்று உறங்கிமறம் தவாச் செல்வியே !

     காட்சிப்படலம்102ஆம்பாட்டை (கம்ப. 5171) தழுவியது.    (103-1)

408.

என்றனன்,எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி
நி....லத் தாவிநிலன் ஒளி கலனில் தோய,
மின்தனை மின்சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ,
                           மெல்லச்
சென்று,அவன்தன்னைச் சார்ந்தாள், மயன் அருள்
                           திலகம் அன்னாள்.

     மயன் அருள் திலகம் -மண்டோதரி.                  (149-1)

409.

பொருக்கெனஅவனி...க...கொடி முறுவல் பூப்ப,
அரக்கர்கோமகனை நோக்கி, ‘ஆண்மை அன்று;
                           அழகும் அன்றால்
செருக்கு உறுதவத்தை, கற்பின் தெய்வத்தை,
                           திருவை இன்னே
வெருக் கொளச்செய்வது ! ஐயா !’ என, இவை
                           விளம்பலுற்றாள்;

     அரக்கர் கோமகனை -இராவணனை. இங்கே ஐந்து பாடல்கள் 408
முதல் 412 வரை. மண்டோதரி இராவணனை