நோக்கிப் பேசியதாகவருவன. இத்ததைய குறிப்பு கம்பர் வேறெங்கும் அமைத்ததாக இல்லை. (149-2) | 410. | ‘செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார், வெம்மை உற்றுஉன்மேல் வீழ்வார், வெள்கியே நகை செய்து ஓத, தம் மனத்து ஆசைவேறோர் தலைமகற்கு உடையாள் தன்னை அம்மலற்றுஇறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே. |
நகை செய்து -இகழ்ந்து. இறைஞ்சும் வேட்கைதான் உள்ளதே அன்றி வேறு பயன் இல்லை என்பதாம். (149-3) | 411. | புலத்தியன்மரபின் வந்து புண்ணியம் புரிந்த மேன்மைக் குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ ? என்றும் கொள்ளாய் ! வலத்து இயல்ஆண்மைக்கு ஈது மாசு’ மதிப்பி....... ........................................................................................ |
வலத்து இயல் ஆண்மை -சென்ற போர் தொறும் வென்றியே புனையும்வல்லமையாம். (149-4) | 412. | வாச மென்குழலினாரால், மண்ணினில், வானில், யார்க்கும் நாசம் வந்துஏன்று... மறைகளே நவிலும் மாற்றம் பூசல் வண்டுஉறையும் தாராய் ! அறிந்தும் நீ, புகழால், பொற்பால், தேசுடையவளோ, என்னின், சீதையும் ?.......... |
புகழ் பொற்பு தேசுஆகியவற்றில் யானும் சீதையும் ஒன்றே என்பது மண்டோதரி வார்த்தை. (149-5) |