| | கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை பெய்திடும்ஏல்வையில், தவத்தின் பெற்றியால். |
மேற்பாட்டு போன்றதே இதுவும். (21-3) | 418. | தோன்றினன், தனது உருக் காண; தூயவள் மூன்றுஉலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர் தேன் திகழ்திருவடி சென்னியால் தொழுது ஆன்ற பேர் அன்புகொண்டு, அறைதல்மேயினான்; |
அனுமன் சீதையைக் கண்டுதிருவடி தொழுதல். (22-1) | 419. | நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர் நீக்கினர்துயிலினை; நின்னைக் காணுதற்கு ஆக்கிய காலம்பார்த்து, அயல் மறைந்து, பின் தாக்கு அணங்குஅவர் துயில் கண்டு, சார்ந்துளேன். |
நுனிப்பு - கணக்கு.தாக்கு அணங்கு அவர் - தீண்டி வருத்தும் தெய்வம்போன்றலர் அரக்கியர். (23-1) | 420. | ‘நிலை பெற,அயன் இருந்து, இயற்று நீலத்தின் சிலை மணிவள்ளமும் உவமை சேர்கல; “அலவன், அது” என்பரால், அறிவு இலோர்; அவர் உலைவு அறு திருமுழங்காலுக்கு ஒப்பு உண்டோ ? |
இராமன் முழங்காலுக்குஒப்பு பிரமன் செய்த நீலமணியால் ஆகிய வள்ளம். நண்டு என்பன பொருத்தமற்றன என்பது இப்பாடல் கருத்து. (43-1) | 421. | ‘எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில் இணை உர ஆய் தள்ளப்படாத தகைஆகி, சார் கத்திரிகை வகை ஒழுகா, அள்ளற் பள்ளத்துஅகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற வள்ளைத் தண்டின்வனப்பு அழித்த, மகரம் செறியாக்குழை’ என்றான் |
|