பக்கம் எண் :

870சுந்தர காண்டம்

    குண்டலம்அணியாச் செவிகளின் உவமை - கத்திரிக்கோலின் காது,
வள்ளைத் தண்டு.                                            (49-1)

422.

தவம் தந்தநெஞ்சின் தனது ஆர் உயிர்த்
                            தம்பியோடும்
நவம் தந்தகுன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி,
கவந்தன்தனது ஆவிகவர்ந்து, ஒரு காலும் நீங்காச்
சிவம் தந்து,மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான்.

     கவந்தனுக்கு சிவம்தந்தான் - சிவம் - மங்கலம். தீர்ந்து வந்தான் -
முடிபாகி வந்தான் என்று சாம்யப் பொருள் உரைக்கலாம்.           (88-1)

423.

‘சென்றேன்அடியேன், உனது இன்னல் சிறிதே
                   உணர்த்தும் அத்துணையும்
அன்றே, அரக்கர்வருக்கம் உடன் அடைவது;
                  அல்லாது, அரியின் கை
மன்றே கமழும்தொடை அன்றே, நிருதர் குழுவும்
                    மாநகரும்
என்றே இறைஞ்சி,பின்னரும், ஒன்று இசைப்பான்
                   உணர்ந்தான் ஈறு இல்லான்.

     அனுமன், நான்இராமன்பால் சென்று தெரிவிக்கும் அளவுதான்
தாழ்த்தது. தெரிவித்தவுடன் அரக்கரும் இலங்கையும் ‘குரங்கின் கைப் பூமாலை
போல்’ ஆகிவிடும் என்று பிராட்டியை வணங்கி, பிறகும் ஒன்று சொல்ல
மனத்தில் உணர்ந்தான் ஈறு இல்லான் - அனுமன். சிரஞ்சீவி என்னும் பொருள்.
                                                       (117-1)

5. சூடாமணிப்படலம் 

424.

‘சேண் தவாநெறி செல் பகல் தீங்கு அற,
மீண்டு,தம்பியும் வீரனும் ஊர் புக,
பூண்ட பேர்அன்பினோருடன் போதியால் !
ஈண்டு யான் வரம்வேண்டினென், ஈறு இலாய் !’

     ஈறு இலாய் - முடிவுஇல்லாத அனுமனே ! ஊர் -அயோத்தி. (31-1)