| 425. | என்றுஉரைத்திடுதி; பின், அயோத்தி எய்தினால், வென்றி வெஞ்சிலையினான் மனம் விழைந்திடாது; அன்றியே, மறைநெறிக்கு அருகன் அல்லனால்; பொன் திணிமௌலியும் புனைதல் இல்லையால். |
இராமனோடு நான்அயோத்தி வந்தாலும் மறைநெறி இயற்றும் தகுதியும், முடிபுனையும் தகுதியும் எனக்கு இல்லை என்று தன்மனம் நொந்து பிராட்டி கூறினாள். (38-1) | 426. | “கொற்றவன்சரத்தினால் குலைகுலைந்து உக, இற்றது இவ்இலங்கை” என்று, இரங்கி ஏங்கவே, மற்று ஒரு மயன்மகள் வயிறு அலைத்து உக, பொற்றொடி ! நீயும் கண்டு, இரங்கப் போதியால் |
அனுமன் சீதையைத்தேற்றியது, கொற்றவன் - இராமன். பொற்றொடி - சீதை. மண்டோதரி வயிற்றில் அடித்து அழ அதுகண்டு சீதை வருந்துவாள் என்பதாம். (65-1) | 427. | அங்கு, அதுஅஞ்சி நடுங்கி, அயன் பதி அண்மி, “இங்கு நின் வரவுஎன்னை” எனக் கனல்வு எய்த, மங்கை பங்கனொடுஎண் திசையும் செல, மற்றோர் தங்கள் தங்கள்இடங்கள் மறுத்தமை தைப்பாய். |
அது - சயந்தன் ஆகியகாகம். மங்கைபங்கன் -சிவபிரான்., இதுமுதல் 5 பாடல்கள்5421 எண்ணுள்ள பாடலிற்கண்ட கதையின் விரிவாகும். (77-1) | 428. | ‘இந்திரன்தரும் மைந்தன் உறும் துயர் யாவும் அந்தரத்தினில்நின்றவர் கண்டு, “இனி, அந்தோ ! எந்தைதன் சரண்அன்றி, ஓர் தஞ்சமும் இன்றால்; வந்து அவன் சரண்வீழ்க !” என உற்றதும் வைப்பாய். |
மைந்தன் - சயந்தன்.எந்தை - இராமபிரான். (77-2) | 429. | “ஐய நின்சரணம் சரண் !” என்று, அவன் அஞ்சி, வையம் வந்துவணங்கிட, வள்ளல் மகிழ்ந்தே, |
|