| | “வெய்யவன் கண்இரண்டொடு போக !” என, விட்ட தெய்வ வெம் படைஉற்றுள தன்மை தெரிப்பாய். |
அவன் - சயந்தன்.வள்ளல் - இராமன் “கண் இரண்டொடு போக” சயந்தன் ஆகிய காகத்துக்கு இரண்டு கண்களை மட்டும் போக்கியது, ஆகும். தெய்வ வெம் படை - “அயல் கல் எழு புல்லால் வேக வெம்படை” என்று (5421) முன்பு கூறப்பட்டது. (77-3) | 430. | “எந்தை,நின் சரணம் சரண் !” என்ற இதன்னால், முந்தை உன்குறையும் பொறை தந்தனம்; முந்து உன் சந்தம் ஒன்றுகொடித் திரள் கண்கள்தமக்கே வந்து ஓர் நன்மணி நிற்க !” என, வைத்ததும் வைப்பாய். |
காகம்எல்லாவற்றிற்கும் இரண்டு கண்களுக்கும் ஒரு மணி (ஒரு பார்வை) நிற்க என வைத்து கூறப்பெறுகிறது. (77-4) | 431. | ‘வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில் போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு பொழிந்தார்; நாக நம்பன்இளங் கிளை நன்கு உணராத, பாகு தங்கியவென்றியின், இன் சொல் பணிப்பாய். |
இளம் கிளை -இலக்குவன். உணராத என்னாது ‘நன்கு உணராத’ என்ற சொல்லாட்சி கருதுக. இதனைப் ‘பாகு தங்கிய வென்றி’ என்றது தன்னால் மட்டுமே நுகர்ந்து இன்புறும் வெற்றியாதலின். தனக்காகத் தன் நாயகன் மேற்கொண்ட செயல் ஆதலின் சீதை நினைந்து இன்புறற்கு ஏதுலாயிற்று.(77-5) 6. பொழில்இறுத்த படலம் | 432. | எனப் பதம்வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா, கனக் குரல் உருமுவீழ, கனமலை சிதற, தேவர் மனத்து அறிவுஅழிந்து சோர, மாக் கடல் இரைப்புத் தீர, சினத்து வாய்மடித்து, தீயோன், நகைத்து, இவை செப்பலுற்றான். |
|