பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்873

     அனுமனால் சோலைஅழிந்தது கேட்ட இராவணன் சீறிய படி இதில்
சொல்லப் பெறுகிறது. தீயோன் -இராவணன்.                      (57-1)

7. கிங்கரர்வதைப் படலம் 

433.

ஓசையின்இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு
                             சினத்தன் ஆகி,
‘ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு
                             போலாம் !
கூசிடாது இலங்கைபுக்கு, இக் குல மலர்ச்
                             சோலையோடு
மாசு அறு நகரைமாய்க்கும் வலிமை நன்று ! என்ன
                             நக்கான்.

     இராவணன் நக்கான்என்க.                             (1-1)

434.

என்றலும்,இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில்
                           தோய,
சென்று அடிபணிந்து, ‘மண்ணும் தேவரும் திசையும்
                           உட்க,
வென்றி அன்றுஎனினும், வல்லே விரைந்து நாம்
                           போகி, வீரக்
குன்று அனகுரங்கைப் பற்றிக் கொணர்தும்’ என்று
                           இசைத்துப் போனார்.

     ‘வென்றி அன்று’ என்றதுகுரங்கினை வெல்வது ஒரு வெற்றியாகக்
கருதப்படாது என்றதாம்.                                    (2-1)

435.

அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை
                           பலவும் எறிந்தார்;
கதிகொடு சிலவர்தொடர்ந்தார்; கணை பலர்
                      சிலைகள் பொழிந்தார்;
குதிகொடு சிலவர்எழுந்தே குறுகினர்; கதைகொடு
                       அறைந்தார்;
மதியொடு சிலவர்வளைந்தார்; மழு, அயில், சிலவர்
                       எறிந்தார்.