கதி - வேகச்செலவு. கதை - தண்டு. (24-1) | 436. | அனுமனும்,அவர் விடு படையால், அவர் உடல் குருதிகள் எழவே, சின அனல் எழ,ஒரு திணி மா மரம்அதில் உடல் சிதறிடவும் தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல பொடிபடவும் தினவு உறு புயம்ஒடிபடவும், திசைதிசை ஒரு தனி திரிவான். |
அவர் படையால் அவர்உடல் குருதி எழச் செய்தான். (24-2) | 437. | உரைத்தஎண்பதினாயிர கோடி கிங்கரரோடு இரைத்த வந்தமாப் பெரும் படை அரக்கர் எண்ணிலரைத் தரைத்தலத்தின்இட்டு அரைத்து, ஒரு தமியன் நின்றது கண்டு, உருத்து அவ்எண்பதினாயிர கோடியர் உடன்றார். |
எண்பதாயிரம் கோடிகிங்கரரோடு வந்த அரக்கர் மடிந்தனர். (39-1) | 438. | சினந்துமற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி, கனம் துவன்றியதுஎன, கரு மலை என, கடல் போல் அனந்தனும் தலைதுளக்குற, அமரர்கள் அரவின் மனம் துளக்குற,வளைத்தனர்,-எண் திசை மருங்கும். |
கனம் துவன்றியது -மேகம் நெருங்கியது. அனந்தன் - ஆதிசேடன். (39-2) | 439. | எடுத்துஎறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித் தொடுத்துஎறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப் படையால் அடித்து நின்றனர்சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி விடுத்துநின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ் செருவே. |
|