கதை -தண்டு. (39-3) | 440. | ஒழிந்திடும்கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள் வளைந்து பொன்கிரிமேல் விழும் இடி என, மறவோர் பொழிந்த பல்படை யாவையும் புயத்திடைப் பொடிபட்டு அழுந்த,மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன். |
பொன் மலை மேல்விழும் இடி - அனுமன் புயத் திடைப்பட்ட படைகள். அனுமன் - பொன்மலை. (39-4) | 441. | ‘கட்டும்’ என்றனர்; ‘குரங்கு இது கடிய கைப் படையால் வெட்டும்’என்றனர்; விழி வழி நெருப்பு உக, விறலோர் கிட்டி நின்றுஅமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான் முட்டும் மா மரம்ஒன்று கொண்டு, அவருடன் முனைந்தான். |
கிட்டி நின்று -நெருங்கி. வான்முட்டும் மாமரம் - மாமரம் என்றும் பெரிய மரம் என்றும் கூறலாம். (39-5) | 442. | தலைஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின் நிலை ஒடிந்திடஅடித்தனன்; சிலர்தமை; நெருக்கிச் சிலை ஒடிந்திடஅடித்தனன், சிலர் தமை; வயப் போர்க் கலை ஒடிந்திடஅடித்தனன், அரக்கர்கள் கலங்க. |
போர்க்கலை ஒடிந்திட- எதிர்ந்தார் கற்று வைத்திருந்த போர்த்திற அறிவு இல்லையாம்படி. (40-1) | 443. | என்றலும்அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி கன்றிய பவழச்செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி, |
|