பக்கம் எண் :

876சுந்தர காண்டம்

 

ஒன்றுஉரையாடற்கு இல்லான், உடலமும் விழியும்
                           சேப்ப,
நின்ற வாள்அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை.

     வாய் எயிறு புக்குஅழுந்தக்கவ்வலும், உடலமும் விழியும் சிவத்தலும்
இராவணன் சினத்தின் மெய்பாடுகள்.                          (61-1)

8. சம்பு மாலிவதைப் படலம்

444.

அது கண்டுஅரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி
                                   அறுநூறு
முதிரும் வயப்போர் மாருதிதன் புயத்தில் மூழ்க
                               விடுவித்தான்;
புதையுண்டு உருவிப்புறம் போக, புழுங்கி அனுமன்
                            பொடி எழும்பக்
குதிகொண்டு,அவன் தேர் விடும் பாகன் தலையில்
                        சிதறக் குதித்தனனால்

     அரக்கன் - சம்புமாலி.600 அம்புகளும் அனுமன் புயத்தில் புதைந்து
உருவிப் புறம் போயது.                                      (45-1)

9. பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்

445.

என்று அவர்ஏவு சரங்கள் இறுத்தே,
‘பொன்றுவிர்நீர், இது போது’ என, அங்கு ஓர்
குன்று இரு கைக்கொடு எறிந்து, அவர் கொற்றம்
இன்று முடிந்ததுஎனத் தனி ஆர்த்தான்.

     பொன்றுவிர் -அழிவீர். கொற்றம் - வெற்றி.                (57-1)

446.

அப்பொழுதுஅங்கு அவர் ஆயிர கோடி
வெப்பு அடை வெஞ்சரம் வீசினர்; வீசி,
துப்புறுவெற்புஅதனைத் துகள் செய்தே;
மெய்ப்படுமாருதிமேல் சரம் விட்டார்.

     வெப்பு அடை - வெம்மைபொருந்திய. துப்பு - வலிமை.     (57-2)

447.

விட்டசரத்தை விலக்கி, அ(வ்) வீரன்,
வட்ட விசும்புறுமா மரம் வாங்கித்