பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்877

 

தொட்டுஎறிதற்கு மு(ன்)னே, துகளாகப்
பட்டிட,வெய்யவர் பாணம் விடுத்தார்.

     பாணம் -அம்பு.                                     (57-3)

10.அக்ககுமாரன்வதைப் படலம் 

448.

தடுவையின்மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க
உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்த, பூ உதிர்ந்தது
                                     என்ன;
அடு புலி அனையவீரர் அணிகல ஆர்ப்பும், ஆனை
நெடு மணிமுழக்கும், ஓங்கி, மண்ணுலகு அதிர்ந்தது
                                    அன்றே.

     இப்பாடலை  5737 ஆம்பாடலோடு ஒப்பிடுக.             (12-1)

449.

பத்தியில்தேர்கள் செல்ல, பவளக் கால் புடைகள்
                          சுற்ற,
முத்தினில்கவிகை சூழ, முகில் என முரசம் ஆர்ப்ப,
மத்த வெங்கரிகள் யாவும் மழை என இருண்டு
                          தோன்ற
தத்திய பரிகள்தன்னின் சாமரை தழைப்ப,-போனான்.

     இப்பாடலை 5729 ஆம்பாடலோடு ஒப்பிடுக.             (15-1)

450.

தீய வல்அரக்கர்தம்மில் சிலர் சிலர் செம் பொற்
                            சின்னம்
வாயின் வைத்துஊத, வீரர் வழி இடம் பெறாது
                            செல்ல,
காயும் வெங்களிறு, காலாள் கடும் பரி, கடுகிச்
                            செல்ல
நாயகன்தூதன்தானும் நோக்கினன்; நகையும்
                            கொண்டான்

     இப்பாடலை, 5731 ஆம்பாடலோடு ஒப்பிடுக.               (16-1)

451.

புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி,
                                 தேர், பொங்க.
கலித்தார்கள்உம்பர் ஓட, கடையுகத்து எறியும்
                                 காலின்