| | புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கிப்பொரு சிலை விளைவித்தான். |
மிண்டி - நெருங்கி.நிருதன் - அக்ககுமாரன். (32-2) | 455. | ‘மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும் உடையான்மகன்’ என வானோர் கண்டு, ஓய்ந்தார்இலர்,குதி கொண்டார்; உவகையின் ஒழியா நறுமலர் சொரிகின்றார்; சாய்ந்தார்நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறித்திரைமிசை விழ ஓடித் தேய்ந்தார்சிலர்; சிலர் பிடரியில் குதியடி பட ஓடினர்;சிலர் செயல் அற்றார். |
அகிலமும் உடையான் -இராவணன். அவன் மகன் அக்ககுமாரன். பிடரியில் குதிபடல் - ஓட்டத்தின் விரைவைக் குறிக்கும் வழக்குச்சொல். (38-1) | 456. | இன்னனநிகழ்வுழி, இராக்கதக் குழாம் மன்னியசோதியும், அரக்கன் மைந்தனும், தன் நிகர்அனுமனால் இறந்த தன்மையை முன்னினர் சொல,அவன் முன்பு கேட்டனன். |
மன்னிய சோதி -படைத்திரள் குறிக்கும் சொல் போலும். (47-1) | 457. | அவ் வகைகண்டவர் அமரர் யாவரும், ‘உய்வகை அரிது’என ஓடி, மன்னவன் செவ்அடிஅதன்மிசை வீழ்ந்து செப்பினார், எவ் வகைப்பெரும் படை யாவும் மாய்ந்ததே. |
மன்னவன் - இராவணன் -அமரர் - பருவத்தேர். (47-2) | 458. | ஈது மற்றுஇசைவுற, இது கண்டு ஏங்கியே மா துயரத்தொடுமறுகு நெஞ்சுடைத் |
|