| | தூதர் உற்றுஓடினர்; தொழுது, மன்னனுக்கு ஓதினர்; ஓதல்கேட்டு, உளம் துளங்கினான். |
தூதர் - பருவத்தேவர்.மன்னன் - இராவணன். (47-3) | 459. | நாடினார்;நாடியே, நனை வரும் கொம்பு அனார் வாடினார்; கணவர்தம் மார்பு உறத் தழுவியே வீடினார்; அவ்வயின், வெருவி விண்ணவர்கள்தாம் ஓடினார்;அரசன்மாட்டு அணுகி நின்று உரை செய்வார்; |
விண்ணவர் -பருவத்தேவர் நனைவரும் கொம்பு - அரும்பு தளிர்க்கும் கொம்பை ஒத்தவர் (47-4) | .460. | “மைந்தனைமடித்தது குரங்கு” என்று ஓதவும் வந்தது போலும்,நம் வாழ்வு நன்று !’ எனா, சிந்தையின்அழன்று, எரி விழித்து, ‘சென்று, நீர் இந்திரன்பகைஞனைக் கொணருவீர்’ என்றான். |
மைந்தன் -அக்ககுமாரன். இந்திரன் பகைஞன் - இந்திரசித்து. (49-1) | 461. | என்றலும்,ஏவலுக்கு உரியர் ஓடியே சென்று, மற்றுஅவன் அடி பணிந்து, தீமை வந்து ஒன்றியதிறங்களும் உரைத்து, ‘நுந்தையும் இன்று உனைக்கூவினன்’ எனவும் சொல்லினார். |
ஏவலர் -இந்திரசித்தை அழைத்தபடி. (49-2) 11.பாசப்படலம் | 462. | என்றே,‘இவன் இப்பொழுது என்கையினால் மடிந்தால் நன்றே மலர்மேல்உறை நான்முகன் ஆதி தேவர், “பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர் போற்றுதற்கு நின்றே துயர்தீர நிறுத்தினன்” என்ப மன்னோ.’ |
|