பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்881

     இவன் -இந்திரசித்து. ‘என்கையால் மடிந்தால் பிரமன் முதலிய
தேவர்கள் நம்துன்பம் நீங்கச் செய்தான் என்று சொல்வர்’ என்று அனுமன்
நினைத்ததாம்.                                             (50-1)

463.

எழுந்தான்;எழுந்த பொழுது, அங்கு அரக்கரும்
                              எண்இல் கோடி
பொழிந்தார்படைகள்; அவை யாவையும் பொடிந்து
                              சிந்திக்
கழிந்து ஓடிட,தன் கை மராமரம் கொண்டு வீசி,
செழுந் தார்ப்புயத்து அண்ணல் செறுத்து, உடன்
                              மோதலுற்றான்.

     செழுந்தார்ப்புயத்துஅண்ணல் - அனுமன். பெயராய் நின்றது. (53-1)

464.

செறுத்துஎழுந்திடும் அரக்கர்கள் திசை திசை
                                நெருக்கி,
மறித்து வெஞ்சமர் மலைதலும், மாருதிக் கடவுள்
கறுத்து வஞ்சகர்சிரத்தொடு கரம் புயம் சிதறிப்
பொறித்தெறித்திடப் புடைத்தனன், பொரு பணை
                                மரத்தால்.

     பொறி தெறித்திட -நெருப்புப் பொறி பறக்க.             (59-1)

465.

புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப்
                                 பொறியின்
தகைந்து, மற்றுஅவர் உடல்களைத் தலைகளைச்
                                சிதறி,
மிகும் திறல்கரி, பரி, மணித் தேர், இவை விளிய,
புகுந்துஅடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார்.

     பொறியின் தகைந்து -கலை வன்மையால் தடுத்து.       (59-2)

466.

எடுத்து நாண்ஒலி எழுப்பினன்; எண் திசைக்
                           கரியும்
படித் தலங்களும்வெடி பட, பகிரண்டம் உடைய,