பக்கம் எண் :

882சுந்தர காண்டம்

 

தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட, சினம்
                         கொண்டு
அடுத்து, அம்மாருதி அயர்ந்திட, அடு சரம்
                         துரந்தான்

     இந்திரசித்துவின்செயல்                                (71-1)

12. பிணி வீட்டுபடலம்

467.

இனையனபற்பலர் இசைப்ப, வெந் திறல்
அனுமனை அமர்க்களம்நின்று, வஞ்சகர்
புனை திருநகரிடைக் கொண்டு போதலை
நினையினர்,நெடிதுற நெருக்கி நேர்ந்துளார்.

     வஞ்சகர் அனுமனைப்பிணித்து நகர்க்குக் கொண்டு செல்லுதலை
நினைந்து நெருக்குகிறார்கள்.                                (17-1)

468.

என்னக்கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத்
தன் ஓர்ஆற்றலின் மாருதி சாற்றுவான்;
‘என் ஓர்நாயகன் ஏவலின், வாரிதி-
தன்னைத் தாண்டிவந்தேன், உனைக் காணவே.’

     வாரிதி - கடல்.உனை - இங்கு இராவணனை.             (108-1)

469.

தன் உறைக்குஉறுகண் வெய்யோர்தாம் இயற்றலும்
                            கேட்டு, ‘இன்னே,
அன்னவர்க்குஇறுதி ஆக, அணி நகர் அழிப்பல்’
                            என்னா,
செந் நிறச்சிகைய வெம் போர் மழு, பின்னர்ச்
                            சேறல் ஓக்கும்-
அல் நிறத்துஅண்ணல் தூதன் அனல் கெழு
                           கொற்ற நீள் வால்.

     தன் இறை - இராமன்.உறுகண் - துன்பம். அனுமன் வால். மழு
பின்னால் செல்வது போன்றது. மழு - நெருப்புப்படை. அனுமன் வாலில்
நெருப்பு வைத்தபடியால் அது திருமாலின் மழு போன்றதாயிற்று.    (135-1)