பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்883

470.

உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன்
                           நாட்டம்
சிகைக் கொழுங்கனலை வீசும் செயல் முனம்
                           பயில்வான் போல,
மிகைத்து எழுதீயர் ஆயோர் விரி நகர் வீய; போர்
                           வால்-
தகைத்தல் இல்நோன்மை சாலும் தனி வீரன்-
                           சேணில் உய்த்தான்.

     உகக்கடை - ஊழிமுடிவு.உணங்குற - காய. தனிலீரன் - அனுமன்.
                                                   (136-1)

13. இலங்கைஎரியூட்டு படலம்

471.

தெய்வநாயகி கற்பு எனும் செந் தழல்
பெய்து மாருதிவாலிடைப் பேணியே,
பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்டதகைமை விளம்புவாம்.

     சீதையின் கற்பு எனும்நெருப்பு மாருதி வாலிடைப் பாதுகாக்கப்பட்டு
வஞ்சகப் புல்லர் நகரை அழித்தது என்றார்.

(முதற்செய்யுள்)

472.

தேர்எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்;
தார் எரிந்தன;எரிந்தன தருக்கு உறு மதமா;
நீர் எரிந்தன;எரிந்தன நிதிக் குவை; இலங்கை
ஊர் எரிந்தன;எரிந்தன அரக்கர்தம் உடலம்.

     தார் - மாலை. நீர்எரிதல் தீயின் மிகுதியால்.             (37-1)

473.

எரிந்தமாளிகை; எரிந்தன இலங்கு ஒளிப் பூண்கள்
எரிந்த பூந்துகில்; எரிந்தது முரசுஇனம் முதலாய்;
எரிந்த மாமணிப்பந்தர்கள்; எரிந்தது கடிகா;
எரிந்த சாமரை;எரிந்தது வெண்குடைத் தொகுதி.

                    

     கடி கா - காப்பமைந்த சோலை.                     (37-2)

474.

ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ-
ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த;