| | தேடு அரும் மணிச்சிவிகையோடு அருந் திறல் அரக்கர் வீடு எரிந்தன;எரிந்திடாது இருந்தது என், வினவில் ? |
சிவிகை - பல்லக்கு.உலப்பு இல் - வற்றுதலற்ற. (37-3) | 475. | இனையகாலையில் மயனும் முன் அமைத்தற்கு இரட்டி புனைய, மாருதிநோக்கின், இன்னன புகல்வான்; ‘வனையும் என்உருத் துவசம் நீ பெறுக’ என, மகிழ்வோடு அனையன்நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான். |
மயன் - தெய்வத்தச்சன். மயனுக்கு மிகுதி கூறியதாகிய செய்தி புலப்படவில்லை. அனலி - தீ. (37-4) | 476. | ‘தா இல்மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின், தமக்கே மேவும், அத்துயர்’ எனும் பொருள் மெய்யுற, மேல்நாள் தேவர்தம்பதிக்கு இராவணன் இட்ட செந் தழல்போல், ஓவிலாது எரித்துஉண்டமை உரைப்பதற்கு எளிதோ ? |
அழகான கருத்து.‘மேலோர்க்குத் துன்பம் செய்தால் அத்துயர் தமக்கே வரும்’ என்பதற் கிணங்க. அமராவதிக்கு இராவணன் இந்திரசித்து மூலமாக இட்ட நெருப்பு இலங்கையை எரி்த்தது என்பதாம். (43-1) | 477. | மற்று ஒருகோடியர் வந்தார்; உற்று எதிர் ஓடிஉடன்றார்; கற்று உறு மாருதிகாய்ந்தே, சுற்றினன்வால்கொடு, தூங்க. |
உடன்றார் -சீறினார். (58-1) |