| 478. | உற்றவர் யாரும் உலந்தார்; மற்றுஅதுபோதினில் வானோர் வெற்றி கொள்மாருதிமீதே பொன் தரு மா மலர் போர்த்தார். |
உலந்தார் -வற்றினார். பொன்தரு - கற்பகம். (60-1) | 479. | வன் திறல்மாருதி கேண்மோ ! நின்றிடின், நீபழுது; இன்றே சென்றிடுவாய் !’என, தேவர் ஒன்றிய வானில்உரைத்தார். |
தேவர் அனுமனைச்செல்லப் பணித்தனர். (60-2) | 480. | விண்ணவர்ஓதிய மெய்ம்மை எண்ணி, ‘இராமனைஇன்றே கண்ணுறலே கடன்’என்று, ஆங்கு அண்ணலும் அவ்வயின் மீண்டான், |
கண்ணுறல் -சந்தித்தல். (60-3) | 481. | வாலிதின்ஞான வலத்தால், மாலுறும் ஐம் பகைமாய்த்தே, மேல் கதிமேவுறும் மேலோர் போல், வயமாருதி போனான். |
வாலிதின் -தூய்மையான. ஐம்பகை - ஐம்பொறிகளாய பகை. மேல்கதி செல்லும் மேலோர் போல் அனுமன் வானவழியில் இலங்கையினின்று சென்றான். (63-1) 14. திருவடி தொழுதபடலம் | 482. | போயினர்களிப்பினோடும், புங்கவன் சிலையின் நின்றும் ஏயின பகழி என்னஎழுந்து, விண் படர்ந்து, தாவி, காய் கதிர்க்கடவுள், வானத்து உச்சியில் கலந்த காலை, ஆயின வீரரும்போய், மதுவனம் அதில் இறுத்தார். |
|