வானரர் இராமன்அம்பு போல் சென்றனர்; நன்பகலில் மதுவனம் சேர்ந்தார். (11-1) | 483. | “ஏத நாள்இறந்த சால” என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து ஆதலான், உணர்வுதீர்ந்து வருந்தினம், அளியம்; எம்மைச் சாதல் தீர்த்துஅளித்த வீர ! தந்தருள் உணவும்’ என்ன, ‘போதும் நாம்,வாலி சேய்பால்’ என்று, உடன் எழுந்து போனார். |
இப்பாடலை 6018ஆம்பாடலுடன் ஒப்பிடுக. வீர ! - அனுமனே. வாலி சேய் - அங்கதன். (11-2) 484. | அங்கதன்தன்னை அண்மி, அனுமனும் இரு கை கூப்பி ‘கொங்கு தங்குஅலங்கல் மார்ப ! நின்னுடைக் குரக்குச் சேனை, வெங் கதம்ஒழிந்து சால வருந்தின, வேடை ஓடி; இங்கு, இதற்குஅளித்தல் வேண்டும், இறால் உமிழ் பிரசம்’ என்றான். |
கதம் - கோபம்.இங்கே வேகம் எழுச்சி எனலாம். வேடை களைப்பு. (11-3) | 485. | ‘நன்று’ என,அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்து, சென்று, உறுபிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே, ஒன்றின் முன்ஒன்று, பாயும்; ஒடிக்கும்; மென் பிரசம் எல்லாம் தின்றுதின்றுஉவகைகூரும்-தேன் நுகர் அளியின் மொய்த்தே. |
நரலை - கடல். மதுவனம்அழித்தல். (11-4) |