| 486. | ஒருவர் வாய்க் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர்; உண்ண ஒருவர் கைக்கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவர்; ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர்; விழுவர்; ஓடி ஒருவர்மேல்ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார். |
மதுவனத்தில்குரங்குகளின் கூத்தாட்டம். (11-5) | 487. | இன்னனநிகழும்காலை, எரி விழித்து, எழுந்து சீறி, அந் நெடு்ஞ்சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி, ‘மன் நெடுங்கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீயிர், என் நினைத்துஎன்ன செய்தீர் ? நும் உயிர்க்கு இறுதி’என்ன. |
மதுவனக் காவலர்அச்சுறுத்தல் (11-6) | 488. | ‘முனியுமால் எம்மை, எம் கோன்’ என்று, அவர் மொழிந்து போந்து, ‘கனியும் மாமதுவனத்தைக் கட்டழித்திட்டது, இன்று, நனி தரு கவியின்தானை, நண்ணலார் செய்கை நாண; இனி எம்மால்செயல் இன்று’ என்னா, ததிமுகற்கு இயம்பினாரே. |
ததிமுகன் - மதுவனக்காவல் தலைவன்; இவன் சுக்கிரீவன் ஏவலால் மதுவனம் காக்கும் வானரன். (11-7) | 489. | கேட்டவன்,‘யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார் ? காட்டிர்’ என்றுஎழுந்தான்; அன்னார்,‘வாலி சேய் முதல கற்றோர் |
|