| | ஈட்டம் வந்துஇறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால், மாட்டின,கவியின் தானை, மது வளர் உல வை ஈட்டம். |
மதுவளர் உலவை -தேன்கூடு. (11-8) | 490. | ‘உரம் கிளர் மதுகையான்தன் ஆணையால், உறுதி கொண்டே, குரங்கு இனம்தம்மை எல்லாம் விலக்கினம்; கொடுமை கூறி; கரங்களால் எற்றநொந்தேம்; காலலோய் !’ என்னலோடும், ‘தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தநயன் போலும்.’ |
தாதை - வாலி - தநயன்- அங்கதன். (11-9) | 491. | என உரைத்து,அசனி என்ன எழுந்து, இரைத்து, இரண்டுகோடி கனை குரல்கவியின் சேனை ‘கல்’ எனக் கலந்து புல்ல, புனை மதுச் சோலைபுக்கான்; மது நுகர் புனிதச் சேனை, அனகனைவாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த. |
அசனி - இடி. அனகன் -இராமன். (11-10) | 492. | ‘இந்திரன்வாலிக்கு ஈந்த இன் சுவை மதுவின் கானம்; அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை தன்னைச் சிந்தினை;கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே ? மந்தரம் அனையதோளாய் ! இற்றது உன் வாழ்க்கை இன்றே. |
|