ததிமுகன்அங்கதனை நோக்கிக் கூறியது. (11-11) | 493. | ‘மதுவனம்தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ’ என்னா, கதுமென வாலிசேய்மேல் எறிந்தனன், கருங் கற் பாறை; அதுதனைப்புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி, ததிமுகன்தன்னைப்பற்றிக் குத்தினன், தடக் கைதன்னால். |
ததிமுகன் அங்கதன் போர். (11-12) | 494. | குத்தினன்என்னலோடும், குலைந்திடும் மெய்யன் ஆகி, மற்று ஒருகுன்றம்தன்னை வாங்கினன், மதுவனத்தைச் செற்றனன்மேலேஏவிச் சிரித்தனன், ததிமுகன்தான்; ‘இற்றனன், வாலிசேய்’ என்று இமையவர் இயம்பும் காலை, |
செற்றனன் -அங்கதன். (11-13) | 495. | ஏற்று ஒருகையால் குன்றை இருந் துகள் ஆக்கி, மைந்தன் மாற்று ஒருகையால் மார்பில் அடித்தலும், மாண்டான் என்ன, கூற்றின் வாய்உற்றான் என்ன, உம்பர் கால் குலையப் பானு மேல் திசைஉற்றான் என்ன, விளங்கினன், மேரு ஒப்பான். |
பானு- சூரியன் (11-14) | 496. | வாய் வழிக்குருதி சோர, மணிக் கையால் மலங்க மோதி, ‘போய் மொழி, கதிரோன்மைந்தற்கு’ என்று, அவன் தன்னைப்போக்கி, |
|