பக்கம் எண் :

890சுந்தர காண்டம்

 

தீ எழும் வெகுளிபொங்க, ‘மற்று அவன்
                            சேனைதன்னை,
காய் கனல்பொழியும் கையால் குத்துதிர், கட்டி’
                            என்றான்.

     ததிமுகனை அடித்துசுக்கிரீவன்  பால் சென்று சொல்க என்று அங்கதன்அனுப்புதல்.                                  (11-15)

497.

பிடித்தனர்;கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும்
                         முன்னும்
இடித்தனர், அசனிஅஞ்ச, எறுழ் வலிக் கரங்கள்
                          ஓச்சி;
துடித்தனர்,உடலம் சோர்ந்தார்; ‘சொல்லும் போய்
                          நீரும்’ என்னா,
விடுத்தனன்,வாலி மைந்தன்; விரைவினால் போன
                          வேலை,

     ததிமுகன்சேனையினரை அங்கதன் சேனையைச் சேர்ந்தவர்
செய்தபடியைக் கூறியது.                                  (11-16)

498.

அலை புனல் குடையுமாபோல், மதுக் குடைந்து ஆடி,
                                     தம்தம்
தலைவர்கட்குஇனிய தேனும் கனிகளும் பிறவும்
                                     தந்தே,
உலைவுறு வருத்தம்தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்;
                                    இப்பால்
சிலை வளைத்துஉலவும் தேரோன் தெறும் வெயில்
                             தணிவு பார்த்தே.

     மாலை நேரம் வருவதுபார்த்து மதுவுண்டு தேன், கனி, பிறவற்றைத்
தலைவர்களுக்குத் தந்து அங்கதன் சேனையினர் இருந்தபடி. 11-1 (482) முதல்
11-16 (498) வரை உள்ளபதினேழு பாடல்கள் வானரவீரர்கள் மதுவனம்
அழித்தமை கூறியது.                                    (11-17)

499.

‘சேற்று இளமரை மலர்த் திருவைத் தேர்க !’ எனக்
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை,