| | தீ எழும் வெகுளிபொங்க, ‘மற்று அவன் சேனைதன்னை, காய் கனல்பொழியும் கையால் குத்துதிர், கட்டி’ என்றான். |
ததிமுகனை அடித்துசுக்கிரீவன் பால் சென்று சொல்க என்று அங்கதன்அனுப்புதல். (11-15) | 497. | பிடித்தனர்;கொடிகள் தம்மால் பிணித்தனர்; பின்னும் முன்னும் இடித்தனர், அசனிஅஞ்ச, எறுழ் வலிக் கரங்கள் ஓச்சி; துடித்தனர்,உடலம் சோர்ந்தார்; ‘சொல்லும் போய் நீரும்’ என்னா, விடுத்தனன்,வாலி மைந்தன்; விரைவினால் போன வேலை, |
ததிமுகன்சேனையினரை அங்கதன் சேனையைச் சேர்ந்தவர் செய்தபடியைக் கூறியது. (11-16) | 498. | அலை புனல் குடையுமாபோல், மதுக் குடைந்து ஆடி, தம்தம் தலைவர்கட்குஇனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே, உலைவுறு வருத்தம்தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால் சிலை வளைத்துஉலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே. |
மாலை நேரம் வருவதுபார்த்து மதுவுண்டு தேன், கனி, பிறவற்றைத் தலைவர்களுக்குத் தந்து அங்கதன் சேனையினர் இருந்தபடி. 11-1 (482) முதல் 11-16 (498) வரை உள்ளபதினேழு பாடல்கள் வானரவீரர்கள் மதுவனம் அழித்தமை கூறியது. (11-17) | 499. | ‘சேற்று இளமரை மலர்த் திருவைத் தேர்க !’ எனக் காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை, |
|