பக்கம் எண் :

892சுந்தர காண்டம்

504.

தகைந்த அச்சேனையைத் தள்ளி, நின்னையும்,
இகழ்ந்துஉரைத்து, இயைந்தனன் வாலி சேய்;
                                  மனக்கு
உகந்தன புகன்றஅவ் உரை பொறாமையே,
புகைந்து, ஒருபாறையின் புணர்ப்பு நீக்கியே,

     அங்கதன் செயல்கூறியது                              (19-4)

505.

‘இமைத்தல்முன், “வாலி சேய், எழில் கொள்
                               யாக்கையைச்
சமைத்தி” என்றுஎறிதர, புறங்கையால் தகைந்து,
அமைத்தரு கனல்என அழன்று, எற் பற்றியே
குமைத்து, உயிர்பதைப்ப, “நீ கூறு போய்” என்றான்.

     அங்கதன் என்னை அடித்து‘நீ போய் கூறு’ என அனுப்பினான் என்று
ததிமுகன் கூறல்.                                           (19-5)

506.

‘இன்று நான்இட்ட பாடு இயம்ப முற்றுமோ ?’
என்று உடல்நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில்,
அன்று அவன்உரைத்தல் கேட்டு, அருக்கன்
                          மைந்தனும்
ஒன்றியசிந்தையில் உணர்ந்திட்டான் அரோ.

     ததிமுகன்கூற்றால் சுக்ரீவன் உணர்தல்.                (19-6)

507.

ஏம்பலோடுஎழுந்து நின்று, இரவி கான்முளை,
பாம்பு அணைஅமலனை வணங்கி, “பைந் தொடி
மேம்படுகற்பினள்” என்னும் மெய்ம்மையைத்
தாம்புகன்றிட்டது, இச் சலம்’ என்று ஓதினான்.

     ததிமுகனுக்கும் வானரவீரர்க்கும் நிகழ்ந்த இச்சண்டை ‘பிராட்டி
மேம்படு கற்பினள்’ என்பதை நமக்குத் தெரிவிக்கிறது என்று சுக்ரீவன்
இராமனிடம் கூறல்.                                       (19-7)

508.

‘பண் தரு கிளவியாள்தன்னைப் பாங்குறக்
கண்டனர்; அன்னதுஓர் களிப்பினால், அவர்