| வண்டு உறைமதுவனம் அழித்து மாந்தியது; அண்டர் நாயக !இனி அவலம் தீர்க’ என்றான். |
சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் ‘மதுவனம் அழித்து மாந்தியது’ என்று சுக்ரீவன் உணர்த்துதல். (19-8) 509. | ‘வந்தனர்தென் திசை வாவினார்’ என, புந்தி நொந்து,‘என்னைகொல் புகலற் பாலர் ?’ என்று எந்தையும்இருந்தனன்; இரவி கான்முளை, நொந்த அத்ததிமுகன்தன்னை நோக்கியே. |
சுக்ரீவன் ததிமுகனை வினாவுதல். (19-9) 510. | ‘யார் அவண்இறுத்தவர், இயம்புவாய் ?’ என, ‘மாருதி, வாலிசேய், மயிந்தன், சாம்பவன், சோர்வு அறுபதினெழுவோர்கள் துன்னினார், ஆர்கலி நாணவந்து ஆர்க்கும் சேனையார்.’ |
ததிமுகன்பதில் (19-10) 511. | என்று,அவன் உரைத்த போது, இரவி காதலன், வன் திறல்ததிமுகன் வதனம் நோக்கியே, ‘ஒன்று உனக்குஉணர்த்துவது உளது; வாலி சேய், புன் தொழில்செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால். |
அங்கதன்நல்லவனே என்று ததிமுகனுக்குச் சுக்ரீவன் கூறுதல். (19-11) 512. | ‘கொற்றவன்பணி தலைக்கொண்டு, தெண் திரை சுற்றிய திசைஎலாம் துருவி, தோகையைப் பற்றியபகைஞரைக் கடிந்து, பாங்கர் வந்து உற்றனர்; அவரையாம் உரைப்பது என்னையோ ? |
அரசுப்பணி மேற்கொண்டு திரும்பியவர்களைக் கடிதல் ஒல்லாது என சுக்ரீவன் உணர்த்தல். (19-12) 513. | ‘அன்றியும், வாலி சேய் அரசு அது; ஆதலின், பின்றுதல்தீதுஅரோ; பிணங்கும் சிந்தையாய் ! |
|