பக்கம் எண் :

கடல் தாவு படலம்9

     புகல் அரும்- நுழையமுடியாத; முழையுள் துஞ்சும் - குகையின்கண்
உறங்கின்ற; பொங்கு உளைச்சீயம் - சிலிர்க்கின்ற பிடரி மயிரையுடைய
சிங்கங்கள்; பொங்கி - கொந்தளித்து; உகல் அருங் குருதி கக்கி - சிந்தக்
கூடாத இரத்தத்தை வெளிப்படுத்தி; உள்ளுற நெரிந்த - உள்ளே சிதைந்தன;
பறவை எல்லாம் - எல்லாப் பறவைகளும்; அகல் இரும் ஊழின்
பரவைநாண
- பரந்த பெரிய ஊழிக்காலத்துக் கடல்கள் வெட்கம் அடைய;
அரற்றுறு குரல ஆகி - கதறுகின்ற கூக்குரலை உடையனவாய்; பகல் ஒளி
கரப்ப
- சூரியனுடைய பிரகாசம் மறையும்படி; வானை மறைத்தன -
ஆகாயத்தை மூடின.

    அனுமன் திருவடிபடஅழுந்திய மலைக்குகைக்குள் சிங்கங்கள் குருதி
கக்கி நெரிந்தன. பறவைகள் வானை மறைத்தன. நெரிதல் - சிதைதல்,
நொறுங்குதல். வாளரக்கன் தலை பத்தும் நெரித்தவன் (நாவரசர் - மன்னு
மலைமகள் 10)                                            (4)

4745.

மொய்யுறுசெவிகள் தாவி,
     முதுகுஉற,முறைகால் தள்ள,
மைஅறு விசும்பினூடு
     நிமிர்ந்தவாலதிய, மஞ்சின்
மெய்உறத்தழீஇய, மெல்லென்
     பிடியொடும்வெருவ லோடும்
கையுற மரங்கள்சுற்றி,
    பிளிறின-களிநல் யானை.
 

     களிநல் யானை- மதமயக்கமுடைய பெரிய யானைகள்; மைஅறு
விசும்பினூடு
- மேகம் இல்லாத ஆகாயத்தின்கண்; நிமிர்ந்த வாலதிய -
நீண்ட வாலையுடைய (யானைக் கன்றுகள்); மொய்உறு செவிகள் - வலிமை
மிக்க காதுகள்;
தாவி முதுகுற - பரவி முதுகைச்சார (அதனால்); முறைகால்
தள்ள
-பருவக்  காற்று வீச; மஞ்சின் மெய்யுறத் தழீஇய - மேகத்தைப்
போல(த்தம்) உடம்பைத் தழுவிக் கொண்ட; மெல்லென் பிடியொடும் -
மென்மையான பெண் யானைகளுடன்; வெருவலோடும் - அச்சத்தோடும்;
கைஉற மரங்கள் சுற்றி - கைகளால் மரங்களைச் சுற்றிக் கொண்டு; பிளிறின
- வீறிட்டுக் கதறின.

     யானை, கன்று,பிடியுடன் அச்சத்தோடு மரங்களைப் பற்றிப் பிளிறின.
வாலதிய - வாலையுடைய கன்று. வாலதி - வால். அ -