பக்கம் எண் :

962யுத்த காண்டம் 

வீக்கு இழந்தது வீழ்ந்தது, வரை சுழல் 

விரி சுடர் வீழ்ந்தென்ன. 

 

தாக்குகின்றன - தான்  விடுத்த  அம்புகள் கவசத்தின் மீது
மோதுகின்றன  எனினும்;   தலையது   நுழைகில  -  நுனிகள்
கவசத்தினுள்  நுழைய  மாட்டாதனவான  தன்மையை; தாமரைத்
தடங்கண்ணான்  நோக்கி
-  தாமரைத்  தடங்கண்ணன் ஆன
இராமன்  பார்த்து;  இங்கு  இது  சங்கரன் கவசம் என்று-
இக்கவசம்  சிவன்  அளித்தது  என்று;  உணர்வுற   நுனித்து
உன்னி
- உணர்வு  தோன்ற அதை  நுணுகி எண்ணிப் பார்த்து;
அங்கு அவன் அடு  படை  ஆக்கி - அப்போது   சிவனது
கொல்லும் தன்மையுள்ள அம்பினை வில்லில் பூட்டி; தொடுத்து
விட்டு  அறுத்தனன்
  -  தொடுத்துவிட்டு அழித்தனன்; அது
சிந்தி   வீக்கு   இழந்தது
   -   அச்சிவ  கவசம்  கட்டுக்
குலைந்ததாகி; வரைசூழ் விரிசுடர்  வீழ்ந்தென்ன வீழ்ந்தது
- மேருமலையை  வலமாக  வரும்  கதிரவன் வீழ்ந்தது போல்
ஒளியுடன் பூமியில் விழுந்தது.
 

சிவனது கணை பாசுபதக்கணை  எனப்படும். சிவகவசத்தை
சிவனது கணையால் இராமன் அறுத்தனன். 
 

(332)
 

7604.

காந்து வெஞ் சுடர்க் கவசம் அற்று உகுதலும், 

கண்தொறும் கனல் சிந்தி, 

ஏந்து வல் நெடுந் தோள் புடைத்து ஆர்த்து, அங்கு 

ஓர்

எழு முனை வயிரப் போர் 

வாய்ந்த வல் நெடுந் தண்டு கைப்பற்றினன்; 

'வானரப் படை முற்றும் 

சாந்து செய்குவனாம்' என முறை முறை 

அரைத்தனன். தரையோடும். 

 

வெஞ்சுடர்  காந்து   கவசம் - வெப்பமான   ஒளியை
வெளியிடுகிற கவசம்; அற்று உகுதலும் - அறுபட்டுச் சிந்திய
அளவில்; கண்  தொறும்  கனல்  சிந்தி  -   தன்  இரு
கண்களிலும்  நெருப்புப் பொறியைச் சிந்தி; ஏந்து வல்நெடுந்
தோள் புடைத்து ஆர்த்து
- ஓங்கிய வலிய நெடிய தோளைத
தட்டிப் பேரொலி செய்து;  அங்கு - அப்போது;  எழுமுனை
வயிரப்   போர்  வாய்ந்த   ஓர்   வல்நெடுந்   தண்டு
கைப்பற்றினன்
- இரும்பு முனை உடையதும் உறுதியுடையதும்,
போர்க்கு வாய்த்ததும் ஒப்பற்றதுமான வலிய