பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 963

நெடிய  தண்டாயுதத்தைக்  கையில்  கொண்டவனாய்; வானரர்
படை  முற்றும்  சாந்து செய்குவனாம் என
- குரங்குப்படை
முழுவதையும் சாந்து போல் ஆக்கி விடுவான் என்று கண்டோர்
கருதுமாறு; முறை முறை தரையோடும் அரைத்தனன் - முறை
முறையாகத் தரையோடும் அரைக்கலானான்.
 

(333)
 

7605.

பறப்ப ஆயிரம், படுவன ஆயிரம், 

பகட்டு எழில் அகல் மார்பம் 

திறப்ப ஆயிரம், திரிவன ஆயிரம், 

சென்று புக்கு உருவாது 

மறைப்ப ஆயிரம், வருவன ஆயிரம், 

வடிக் கணை என்றாலும், 

பிறப்ப ஆயிடைத் தெழித்துறத் திரிந்தனன், 

கறங்கு எனப் பெருஞ் சாரி. 

 

பறப்ப ஆயிரம் - வானத்தில் பறப்பவை ஆயிரம்; படுவன
ஆயிரம்
  -  பகைவர்  மேல் படுவன ஆயிரம்; பகட்டு எழில்
அகல் மார்பம் திறப்ப  ஆயிரம் 
-  பெருமையும்  அழகும்
பெற்று அகன்ற மார்பைப் பிளப்பன ஆயிரம்; திரிவன ஆயிரம்
- பறந்து திரிவன ஆயிரம்; சென்று புக்கு உருவாது  மறைப்ப
ஆயிரம்
  -  பகைவர்   உடம்பில்   போய்   உள்    புகுந்து
தொளைத்திடாமல் மறைந்தன ஆயிரம்;  வருவன  ஆயிரம் -
இராமன்   வில்லில்  இருந்து  வெளிப்பட்டு  வருவன ஆயிரம்;
வடிக்கணை  என்றாலும்  -  கூரிய  அம்புகள்   என்றாலும்;
பிறப்ப - வாயிடைப் பேரொலி தோன்ற;   ஆயிடை- அங்கே;
தெழித்து - அதட்டிக்கொண்டு;  கறங்கு  எனப் பெருஞ்சாரி
உறத்  திரிந்தனன்
- காற்றாடி   போல்   பெருஞ்சாரி  மிகத்
திரிந்தனன் என்க.
 

இராமன்  வடிக்கணை  பல்வேறு அழிவுகளைச் செய்தாலும்
அதற்கு அஞ்சாது கும்பகருணன் பெருஞ்சாரி திரிந்தனன். 
 

(334)
 

7606.

'தண்டு கைத்தலத்து உளதுஎனின், உளதன்று 

தானை' என்று, அது சாயக் 

கொண்டல் ஒத்தவன், கொடுங் கணை பத்து ஒரு 

தொடையினில் கோத்து எய்தான்; 

கண்டம் உற்றது மற்று அது; கருங் கழல் 

அரக்கனும், கனன்று, ஆங்கு ஓர்