பக்கம் எண் :

964யுத்த காண்டம் 

மண்டலச் சுடராம் எனக் கேடகம் 

வாங்கினன், வாளோடும். 

 

தண்டு கைத்தலத்து உனது எனின்- தண்டாயுதம் இவனது
கையில்  உள்ளதானால்; தானை உளதன்று  என்று- குரங்குச்
சேனை உயிரோடு  இருத்தல்  முடியாது  என்று எண்ணி; அது
சாய
- அந்தத்  தண்டு அ ழியுமாறு; கொண்டல் ஒத்தவன்
கருமேகத்தை  ஒத்த  நிறத்தவன்   ஆகிய   இராமன்;   ஒரு
தொடையினில்
- ஒரு தொடுப்பினில்; கொடுங்கணை பத்துக்
கோத்து  எய்தான்
- கொடிய  அம்புகள்  பத்தினை வில்லில்
கோத்து எய்தான்; மற்று அது கண்டம்   உற்றது- அதனால்
அந்தத்    தண்டாயுதம்   துண்டாகி   விட்டது;  கருங்கழல்
அரக்கனும்
- அதனால்  கரிய  கழலை  அணிந்த  அரக்கன்
ஆகிய   கும்பகருணனும்;  கனன்று  -  சினம்    கொண்டு;
ஆங்கு -  அப்போது; ஓர்  மண்டலச்  சுடராம்    என
வாளோடும்   கேடகம் வாங்கினன்
  -  ஒப்பற்ற  பூமியில்
விளங்கும் கதிரவன் என்னுமாறு ஒளியுடை வாளும் கேடகமும்
கைக்கொண்டான். 
 

(335)
 

7607.

வாள் எடுத்தலும், வானர வீரர்கள் 

மறுகினர், வழிதோறும் 

தாள் எடுத்தனர், சமழ்த்தனர்; வானவர் 

தலை எடுத்திலர், தாழ்ந்தார்; 

'கோள் எடுத்தது, மீள' என்று உரைத்தலும், 

கொற்றவன், 'குன்று ஒத்த 

தோள் எடுத்தது துணித்தி' என்று, ஒரு சரம் 

துரந்தனன், சுரர் வாழ்த்த. 

 

வாள்  எடுத்தலும்- கும்பகருணன் வாள் படையை  எடுத்த
உடனே; வானர வீரர்கள் மறுகினர் - குரங்குப் படை வீரர்கள்
மனம் கலங்கி; வழி தோறும் தாள் எடுத்தனர் - வழி தோறும்
கால்   விசைத்து   ஓடினர்;   வானவர்   சமழ்த்தனர் தலை
எடுத்திலர்  தாழ்ந்தார்
  -  தேவர்கள்  போர்க்களத்தினராய்த்
தலை   தூக்க   முடியாது தலையைத் தொங்கவிட்டனர்; கோள்
எடுத்தது  மீள
- உயிர்க்  கொள்ளை  தொடங்கியது  மீளவும்;
என்று  உரைத்தலும்  -  என்று  துணைவர்கள்   சொல்லலும்;
கொற்றவன்- வெற்றி பொருந்திய இராமன்; எடுத்தது- வாளை
எடுத்ததான;  குன்று  ஒத்த தோள் துணித்தி என்று- குன்று
ஒத்த தோளைத் துணிப்பாயாக என்று