பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 965

சொல்லி;  ஒருசரம்  சுரர்  வாழ்த்த  துரந்தனன்-  ஒப்பற்ற
அம்பினைத் தேவர்கள் வாழ்த்தச் செலுத்தினான்.
 

(336)
 

கும்பகருணன் கை அறுபடல்
 

7608.

அலக்கணுற்றது தீவினை; நல்வினை 

ஆர்த்து எழுந்தது; வேர்த்துக 

கலக்கமுற்றனர், இராக்கதர்--'கால வெங் 

கருங் கடல் திரை போலும் 

வலக் கை அற்றது, வாளொடும்; கோளுடை 

வான மா மதி போலும்; 

இலக்கை அற்றது, அவ் இலங்கைக்கும் இராவணன் 

தனக்கும்' என்று எழுந்து ஓடி. 

 

தீவினை  அலக்க ணுற்றது- தனக்கு  உதவும் கும்பகருணன்
கை   அறப் போவதால்  தீவினை  துன்பமடைந்தது;  நல்வினை
ஆர்த்து   எழுந்தது 
-  நல்வினை   மகிழ்ச்சியால்  பேரொலி
யெழுப்பியது;   கால    வெங்கருங்கடல்   திரை   போலும் 
-  உகமுடிவுக்காலத்தில்    பொங்கி    எழுகின்ற  கருங்கடலின்
அலையைப் போன்ற;  வலக்கை  -  வலக்கையானது; கோளுடை
வானமாமதி   போலும் வாளொடும்  அற்றது
-  இராகுவினால்
பற்றப்பட்டுக்  குறைபடுதலை  உடைய   வானத்து  நில  போன்ற
வாளோடு   அறுபட்டு    வீழ்ந்தது;  அவ்     இலங்கைக்கும்
இராவணன் தனக்கும்
-  அதனால்  இலங்கைப் பெருநகருக்கும்
இராவணனுக்கும்; இலக்கை   அற்றது - பாதுகாவல்  நீங்கியது;
என்று எழுந்து ஓடி- என்று  சொல்லிக்கொண்டு  எழுந்து  ஓடி;
இராக்கதர் வேர்த்துக்  கலக்கமுற்றனர் - அரக்கர்கள்  உடல்
வியர்த்து மனம் கலங்கினர்.
 

தீவினை  நல்வினை   என்பன   "வினைத்தெய்வம்"  என்று
தொல்காப்பியம் கிளவியாக்கம் கூறும். 
 

(337)
 

7609.

மற்றும், வீரர்கள் உளர் எனற்கு எளிதுஅரோ, 

மறத்தொழில் இவன் மாடு 

பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது-- 

பேர் எழில் தோளோடும் 

அற்று வீழ்ந்த கை அறாத வெங் கையினால் 

எடுத்து, அவன் ஆர்த்து ஓடி