| எற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்து ஓடின |
| வானரக் குலம் எல்லாம்? |
| |
பேர் எழில் தோளோடும் - மிக்கு எழுந்து வளர்ந்த அழகிய தோளுடன்; அற்று வீழ்ந்த கை- அறுபட்ட வீழ்ந்த வலக்கையை; அறாத வெங்கையினால் எடுத்து- அறுபடாது உள்ள கொடுமையான இடக்கையினால் எடுத்துக்கொண்டு; அவன் ஆர்த்து ஓடி- அக்கும்பகருணன் பேரொலி எழுப்பிக் கொண்டு ஓடி; எற்ற எயிறு இளித்து ஓடின- அடித்ததனால் பல்லை இளித்துக் கொண்டு ஓடின; வானரக் குலமெல்லாம் - குரங்குக் கூட்டங்கள் எல்லாம்; வீழ்ந்தன- உயிரொழிந்து வீழ்ந்தன; மறத்தொழில் இவன் மாடு பெற்று நீங்கினர் ஆம்- இவ்வாறு வீரப் போரிட்ட இவனிடத்து வீரத்தை இரந்து பெற்றவர்கள் ஆம்;எனின் அல்லது- தவிரப் பிறர்; மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிதரோ- வீரர்களாக வேறு பிறந்தவர் உளர் என்று சொல்லுதல் எளிமையானதோ அன்று. |
வலக்கையை இடக்கையால் எடுத்துக் கும்பகருணன் விளைவித்த வீரச் செயலின் சிறப்பை இப்பாடலின் பின்னிரு வரிகள் விளக்குகின்றன. இவனிடம் வீரத்தை இரந்து பெற்றவர்கள் வேண்டுமானால் வீரர்களாக இருக்கலாமே அன்றிப் பிறர் இவனைக் காட்டிலும் சிறந்த வீரர் என்றுரைத்தல் எளிமையான செயலன்று என்றவாறு. |
(338) |
| 7610. | வள்ளல் காத்து உடன் நிற்கவும், வானரத் |
| தானையை மறக் கூற்றம் |
| கொள்ளை கொண்டிட, பண்டையின் மும்மடி |
| குமைக்கின்ற படி நோக்கி, |
| 'வெள்ளம் இன்றொடும் வீந்துறும்' என்பதோர் |
| விம்மலுற்று உயிர் வெம்ப, |
| உள்ள கையினும் அற்ற வெங் கரத்தையே |
| அஞ்சின, உலகு எல்லாம். |
| |
வள்ளல் காத்து உடன் நிற்கவும்- வள்ளல் தன்மை உள்ள இராமன் சேனையைக் காத்து உடன் இருக்கவும்; வானரத் தானையை - குரங்குச் சேனையை; மறக்கூற்றம் கொள்ளை கொண்டிட- வலிமை உடைய யமன் கொள்ளை கொள்ளும்படி; பண்டையின் மும்மடி குமைக்கின்ற படி நோக்கி- முன்பு அழித்ததை |