விட மூன்று மடங்கு அழிக்கின்ற தன்மையைப் பார்த்து;உலகு எல்லாம் - உலகோர் எல்லாம்; வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று- குரங்கு வெள்ளமானது இன்றே அழிந்து போய்விடும் என்று கருதுவதால் துன்பத்தைக் கொண்டு; உயிர் வெம்ப - உயிர் துடிக்க; உள்ள கையிலும் அற்ற வெங்கரத்தையே அஞ்சின- அற்றுப் போகாமல் உள்ள கையினும், அற்றுப் போன கொடிய கரத்தைக் கண்டே பயந்தனர். |
இடக்கையால் அற்ற வலக்கையை எடுத்து மோதி அடித்து அழிப்பதால அற்றகைக்கு உலகு அஞ்சின என்ற நயம் காண்க. |
(339) |
| 7611. | மாறு வானரப் பெருங் கடல் ஓட, தன் |
| தோள்நின்று வார் சோரி |
| ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட, மேல் |
| அமரரும் இரிந்து ஓட, |
| கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் |
| பறவையும் குலைந்து ஓட, |
| ஏறு சேவகன்மேல் எழுந்து ஓடினன், |
| மழைக் குலம் இரிந்து ஓட. |
| |
மாறு வானரப் பெருங்கடல் ஓட- பகையாக உள்ள வானரப் பெரும் படையாகிய கடல் நிலை கெட்டு ஓட; தன் தோள் நின்று வார் சோரி ஆறு- தன் தோளில் இருந்து வடிகின்ற குருதியாகிய ஆறு; விண்தொடும் பிணம் சுமந்து ஓட - விண்ணைத் தொடுமளவு போர்க்களத்தில் குவிந்துள்ள பிணங்களைச் சுமந்து கொண்டு ஓட; மேல் அமரரும் இரிந்து ஓட- வானத்தில் உள்ள தேவர்களும் நிலை கெட்டு ஓட; இலங்கையும் விலங்கலும் பறவையும் கூறு கூறுபட்டு குலைந்து ஓட- இலங்கை நகரும் அங்குள்ள மலைகளும் பறவை முதலிய உயிரினங்களும் குருதி ஆற்றின் வேகத்தால் பலவகையாகப் பிரிந்து நிலைகுலைந்து ஓட; மழைக்குலம் இரிந்தோட- மேகக் கூட்டம் நிலை கெட்டு ஓட; ஏறு சேவகன் மேல் எழுந்து ஓடினன் - சிங்கவேறு போன்ற இராமன் மேல் எழுந்தோடினன் கும்பகருணன் என்க. |
(340) |
| 7612. | 'ஈற்றுக் கையையும் இக் கணத்து அரிதி' என்று |
| இமையவர் தொழுது ஏத்த, |
| தோற்றுக் கையகன்று ஒழிந்தவன் நாள்அவை |
| தொலையவும், தோன்றாத |