பக்கம் எண் :

968யுத்த காண்டம் 

கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட, நெடுங் 

கொற்றவன் கொலை அம்பால் 

வேற்றுக் கையையும் வேலையில் இட்டனன், 

வேறும் ஓர் அணை மான. 

 

ஈற்றுக் கையையும் இக்கணத்து அரிதி  என்று- மற்றொரு
கையையும்  இப்பொழுதே  அரிந்திடுவாய்   என்று;  இமையவர்
தொழுது  ஏத்த
- தேவர்கள்  கைதொழுது  துதிக்க; தோற்றுக்
கையகன்று  ஒழிந்தவன்
-  இராமனுக்கு  முன்  வலி தோற்று
வலக்கை நீங்கி ஒழிந்தவனாகிய கும்பகருணனுடைய;நாள் அவை
தொலையவும்
  -  வாழ்நாள்கள்    கெடுமாறும்;   தோன்றாத
கூற்றுக்கு   ஐயமும்   அச்சமும் கெட
- இதுவரை அரக்கர்
கண்முன்   தோன்றியிராத   யமனுக்கு ஐயமும் அதனால் வரும்
அச்சமும் நீங்குமாறும்; நெடுங்கொற்றவன் - மிக்க வெற்றிக்குரிய
இராமன்; கொலை  அம்பால்- கொல்லும் தன்மை உள்ள தன்
அம்பால்; வேற்றுக் கையையும்- மற்றொரு கையையும்; வேறும்
ஓர்  அணை  மான   வேலையில்   இட்டனன்
  -  வேறு
அணையென்று தோன்றுமாறு கடலில் இட்டனன்.
 

ஈற்றுக்கை-மற்றொருகை (இடக்கை)  கையகன்று  செயலற்று
எனினுமாம்.  வேறும்  ஓர்  அணை  மான-முன்பு கட்டிய சேது
அணை   இப்போது  இட்ட  கும்பகருணனின் இடக்கை வேறு
ஓரணை என்றார். 
 

(341)
 

7613.

சந்திரப் பெருந் தூணொடுஞ் சார்த்தியது, 

அதில் ஒன்றும் தவறு ஆகாது, 

அந்தரத்தவர் அலை கடல் அமுது எழக் 

கடைவுறும் அந் நாளில், 

சுந்தரத் தடந் தோள் வளை மாசுணம் 

சுற்றிய தொழில் காட்ட, 

மந்தரத்தையும் கடுத்தது,--மற்று அவன் 

மணி அணி வயிரத் தோள். 

 

சுந்தரத் தடந்  தோள்வளை- அழகிய பெரிய   தோளில்
அணிந்த வளையானது; மாசுணம்  சுற்றிய தொழில்  காட்ட-
பாம்பு சுற்றிய தன்மையைத்  தோற்றுவிக்க; மற்று அவன் மணி
அணி வயிரத் தோள்
- அந்தக் கும்பகருணனுடைய மணி பதித்த