| குந்தி வந்தனன், நெடு நிலம் குழி பட, | | குரை கடல் கோத்து ஏற. | | | பந்தி பந்தியின் பற்குலம் மீன்குலம் பாகுபாடு உற- வரிசை வரிசையாக உள்ள பற்களின் கூட்டம் நட்சத்திரக் கூட்டம் போல் பாகுபாடு உற்று விளங்க; பாகத்து இந்து வெள் எயிறு இமைத்திட - அதனிடையே பிறைச் சந்திரன் போல் நீண்ட கோரைப் பல் விளங்கித் தோன்ற; குருதியாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் அந்தி வந்தென- குருதியாற்று ஒழுக்கினால் எழுகின்ற செம்மை செவ்வானத்தை உடைய அந்திப் பொழுது வந்தது போல் தோன்ற அகல் நெடு வாய் விரித்து- தன் அகன்ற பெரிய வாயை விரித்துக்கொண்டு; நெடுநிலம் குழிபட - நெடிய நிலம் குழிபட; குரை கடல் கோத்து ஏற - அதனால் ஒலிக்கின்ற கடல் நீர் நிலத்தின் மீது பரவ; அடி ஒன்று கடிது ஒட்டி குந்தி வந்தனன் - ஒற்றைக் காலடி மேல் எழுந்து வலிமையாகப் பூமியில் பொருந்துமாறு நொண்டிக் கொண்டு போரிட வந்தான். | (346) | | 7618. | மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து, மாடு | | உள எலாம் வளைத்து ஏந்தி, | | சூறை மாருதம் ஆம் எனச் சுழித்து, மேல் | | தொடர்கின்ற தொழிலானை, | | ஏறு சேவகன், எரி முகப் பகழியால், | | இரு நிலம் பொறை நீங்க, | | வேறு காலையும் துணித்தனன், அறத்தொடு | | வேதங்கள் கூத்தாட. | | | மாறுகால் இன்றி- மற்றொரு கால் இல்லாமல்; வானுற நிமிர்ந்து - வானத்தைப் பொருந்துமாறு ஓங்கி; மாடு உள எலாம் - பக்கத்தில் உள்ளவைகளை எல்லாம்; வளைத்து ஏந்தி - நாவால் வளைத்துக் கடித்து ஏந்திய வண்ணம்; சூறை மாருதம் ஆம் என- கடுங்காற்று ஆகும் என்று கண்டோர் கூறுமாறு; சுழித்து மேல் - வட்டமிட்டு மேல்; தொடர்கின்ற தொழிலானை - கொல்லும் தொழிலைத் தொடர்கின்ற கும்பகருணனை; ஏறு சேவகன்- ஆண் சிங்கம் போன்றவனாகிய இராமன்; எரிமுகப் பகழியால் - நெருப்பை நுனியில் கொண்ட அம்பால்; இருநிலம் பொறை நீங்க- பெரிய நிலத்தின் பாரம் குறையும்படி; அறத்தொடு வேதங்கள் |
|
|
|