கூத்தாட - அறக்கடவுளும் வேதங்களும் கூத்தாட; வேறு காலையும் துணித்தனன்- மற்றொரு காலையும் துணித்தனன். |
(347) |
| 7619. | கை இரண்டொடு கால்களும் துணிந்தன; |
| கரு வரை பொருவும் தன் |
| மெய் இரண்டு நூறாயிரம் பகழியால் |
| வெரிந் உறத் தொளை போய; |
| செய்ய கண் பொழி தீச் சிகை இரு மடி |
| சிறந்தன; தெழிப்போடும், |
| வய்யம் வானிடை மழையினும் பெருத்தது, |
| வளர்ந்தது, பெருஞ் சீற்றம். |
| |
கை இரண்டொடு கால்களும் துணிந்தன- கை இரண்டுடனே கால்கள் இரண்டும் துண்டுபட்டன; கருவரை பொருவும் தன் மெய் - தன்னுடைய பெரிய மலையை ஒத்த உடல்; - இரண்டு நூறாயிரம் பகழியால் - இருநூறு ஆயிரம் அம்புகளால்; வெரிந் உறத் தொளை போய- முதுகுவரை மிகுதியாகத் துளையாக்கியது; செய்ய கண்பொழி தீச்சிகை- சிவந்த கண்களில் இருந்து நெருப்பு அனல்; இருமடி சிறந்தன - இரண்டு மடங்கு மிக்கது; பெருஞ் சீற்றம் - மிக்க சினம்; தெழிப்போடும் - பேரொலியோடு; வய்யம் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது - நில உலகில் வானத்திடையில் தோன்றும் இடியொலி போல் மிக்கு வளர்ந்தது. |
வையம்-வய்யம்-போலி. |
(348) |
கும்பகருணன் மலைகளைக் கவ்வி வானரங்களை அழித்தல் |
| 7620. | பாதம் கைகளோடு இழந்தனன், படியிடை |
| இருந்து, தன் பகு வாயால், |
| காதம் நீளிய மலைகளைக் கடித்து இறுத்து |
| எடுத்து, வெங் கனல் பொங்கி, |
| மீது மீது தன் அகத்து எழு காற்றினால் |
| விசைகொடு திசை செல்ல |
| ஊத ஊதப்பட்டு, உலந்தன வானரம், |
| உருமின் வீழ் உயிர் என்ன, |