| 601. | 'ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து | |
| ஓவலின் இவர் தமக்கு உணர ஒண்ணுமோ? | |
| தேவர்கள் தேவன் நீ; தெளியின், அன்னவர்க் | |
| கூவி, இங்கு அறிவது கொள்கை ஆகுமால். | (91-1) |
| |
| 602. | மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து, | |
| வேடன் | |
| மீது ஒரு மரத்தில் சேர, வேண்டு உரை அரிக்குச் | |
| சொல்லி, | |
| பேதம் அற்று இருந்தும், அன்னான் பிரிந்த | |
| வஞ்சத்தை ஓர்ந்தும், | |
| காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது | |
| அன்றோ? | (116-1) |
| |
| 603. | என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி, | |
| 'எந்தாய் | |
| சொன்னதே துணிவது அல்லால், மறுத்து ஒரு | |
| துணிவும் உண்டோ? | |
| உன் உளத்து உணராது ஏது? உனக்கு அரிது | |
| யாதோ?' என்னாப் | |
| பன்னி, மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து | |
| உரைக்கலுற்றான். | (117-1) |
| |
| 604. | வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை | |
| வைப்பை, | |
| தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும், | |
| 'தாழாது | |
| ஊனுடைப் பிறவி தீர்ந்தேன்' என மனத்து உவந்து, | |
| ஆங்கு அண்ணல் | |
| தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது | |
| நின்றான். | (151-1) |
| |
5. இலங்கை கேள்விப் படலம் |
| 605. | திரு மறு மார்பனை இறைஞ்ச, செல்வனும், | |
| அருள் சுரந்து, அரக்கனை அருகு இருத்தியே, | |