| 622. | தம் இனத்து ஒருவற்கு ஒரு சார்வு உற, | |
| விம்மல் உற்று, விடாது உறைவோர்கள்போல், | |
| செம்மை மிக்க குரக்கினம் சேர்க்கையால், | |
| எம் மலைக் குலமும் கடல் எய்துமே, | (29-1) |
| |
| 623. | இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும், | |
| அன்ன சேனைத் தலைவரும், ஆழியைத் | |
| துன்னி நின்று, விடாது இடை தூர்த்தலால், | |
| பொன் இலங்கை தொடுத்து அணை புக்கதே. | (65-1) |
| |
8. ஒற்றுக் கேள்விப் படலம் |
| 624. | என்று, நளனைக் கருணையின் தழுவி, அன்பாய் | |
| அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து | |
| துன்று கதிர் பொற்கலனும் மற்றுள தொகுத்தே, | |
| 'வென்றி, இனி' என்று, படையோடு உடன் | |
| விரைந்தான். | (4-1) |
| |
| 625. | இறுத்தனன்--ஏழு-பத்து வெள்ளமாம் சேனையோடும், | |
| குறித்திடும், அறுபத்தேழு கோடியாம் வீரரோடும், | |
| பொறுத்த மூ-ஏழு தானைத் தலைவர்களோடும், | |
| பொய் தீர் | |
| அலத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா | |
| அமலன் அம்மா! | (13-1) |
| |
(நளனுக்கு முடி சூட்டு படலம்) |
| 626. | என்று மகிழ் கொண்டு, இரவி மைந்தனை இராமன், | |
| 'வன் திறலினான் நளன் வகுத்த அணை, மானக் | |
| குன்றம் நெடுநீரின்மிசை நின்று இலகு கொள்கை | |
| நன்று என முயன்ற தவம் என்கொல்?நவில்க!' என்றான். | (13-2) |
| |
| 627. | நவிற்றுதிர் எனக் கருணை வள்ளல் எதிர் நாமக் | |
| கவிக்கு இறைவன் எய்தி, இரு கை மலர் குவித்தே, | |
| 'புவிக்கு இறைவ! போதின் அமர் புங்கவனிடத்தே | |
| உவப்புடன் உதித்தவர்கள் ஓர் பதின்மர் என்பார். | (13-3) |