| 628. | 'மலரவனிடத்தில் வரு காசிபன், மரீசி, | |
| புலகனுடன் அத்திரி, புலத்தியன், வசிட்டன், | |
| இலகு விசுவன், பிருகு, தக்கன், இயல்பு ஆகும் | |
| நலம் மருவு அங்கிரவு எனப் புகல்வர் நல்லோர். | (13-4) |
| |
| 629. | 'மக்கள்தனில் ஒன்பதின்மர் வானம் முதலாக | |
| மிக்க உலகைத் தர விதித்து, விசுவப் பேர் | |
| தொக்க பிரமற்கு ஒரு தொழில்தனை விதித்தான் | |
| அக் கணம் நினைத்தபடி அண்டம் முதல் ஆக. | (13-5) |
| |
| 630. | 'அன்ன தொழிலால் விசுவகன்மன் எனல் ஆனான், | |
| பொன்னுலகை ஆதிய வகுத்திடுதல் போல, | |
| நென்னல் இகல் மாருதி நெருப்பினில் அழிந்த | |
| நன் நகரம் முன்னையினும் நன்கு உற அளித்தான். | (13-6) |
| |
| 631. | 'மூ-உலகின் எவ் எவர்கள் முன்னு மணி மாடம் | |
| ஆவது புரிந்து, மயன் ஆகவும் இருந்தான்; | |
| தேவர் இகல் மா அசுரர் சொற்ற முறை செய்தற்கு | |
| ஆவளவில் வானவர்கள் தச்சன் எனல் ஆனான். | (13-7) |
| |
| 632. | 'அன்னவன் இயற்கை அறிதற்கு அரிய; மேல்நாள் | |
| பன்னு மறை அந்தணன் விதித்தபடி, பார்மேல் | |
| மன்னும் இறையோர் எவரும் வந்தபடி தானே | |
| உன்னும் அவன் மைந்தன் நளன் என்றிட | (13-8) |
| உதித்தான். | |
| |
| 633. | 'தாயரொடு தந்தை மகிழும் தனையன், வானின் | |
| மேய மதி போல வளர் மெய்யின் மணி மாட | |
| நாயகம்அது ஆன திரு வீதியில் நடந்தே | |
| ஏய சிறு பாலருடன் ஆடி மனை எய்தும். | (13-9) |
| |
| 634. | 'சிந்தை மகிழ் இல்லில் விளையாடு சிறுவன், தேர் | |
| தந்தை வழிபாடுபுரியும் கடவுள்தன்னை | |
| வந்து திகழ் மா மணி மலர்த்தவிசினோடே | |
| கந்த மலர் வாவியினிடைக் கடிதின் இட்டான். | (13-10) |