பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 1001

635.'மற்றைய தினத்தின் இறை எங்கு என மருண்டே
பொற்றொடி மடந்தையை விளித்து, "உரை" என,
போய்
நல் தவ மகச் செயல் நடுக்கி, அயல் நண்ணிச்
சொற்றனள் எடுத்து; வழிபாடு புரி தூயோன்.(13-11)
 
636.'பூசனை புரிந்தவன் வயத்து இறை புகாமே
கோசிகம் அமைத்து, மணி மாடம்அது கோலி,
நேசம் உற வைத்திடவும், நென்னல் என ஓடி
ஆசையின் எடுத்து, அவனும் ஆழ்புனலில் இட்டான்.(13-12)
 
637.'இப்படி தினந்தொறும் இயற்றுவது கண்டே
மெய்ப் புதல்வனைச் சினம் மிகுத்திட வெகுண்டும்,
அப்படி செய் அத்திறம் அயர்த்திலன்; "இவன்தன்
கைப்படல் மிதக்க" என ஓர் உரை கதித்தான்.(13-13)
 
638.'அன்று முதல் இன்னவன் எடுத்த புனல் ஆழா
என்று அரிய மாதவர் இசைத்தபடி இன்னே
குன்று கொடு அடுக்க, நிலைநின்றது, குணத்தோய்!
என்று நளன் வன்திறம் எடுத்துமுன் இசைத்தான்.(13-14)
 
639.சொற்றவை அனைத்தையும் கேட்டு, தூய் மறை
கற்றவர் அறிவுறும் கடவுள், 'இத் தொழில்
முற்றுவித்தனை உளம் மகிழ, மொய்ம்பினோய்!--
மற்று உனக்கு உரைப்பது என், முகமன்?
வாழியாய்!'(13-15)
 
640.'ஐயன் நல் இயற்கை, எப் பொருளும் அன்பினால்
எய்தினர் மகிழ்ந்திட ஈயும், எண்ணினால்;
செய் தொழில் மனக்கொள, செய்த செய்கை கண்டு
உய் திறம் நளற்கும் அன்று உடைமை ஆதலான்.(13-16)