பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள் 1003

648.இளையவன் திரு மலர்க் கையின் ஏந்திய
ஒளி முடி புனைந்திட உலகம் ஏழினும்
அளவு இலா உயிர்த்தொகை அனைத்தும் வாழ்த்தியே
'நளன் இயற்றிய தவம் நன்று' என்று ஓதினார்.(13-24)
 
649.முடி புனை நளன் எழுந்து, இறைவன் மொய் கழல்
அடிமிசை வணங்கிட, அவனுக்கு அந்தம் இல்
படி புகழ் ஆசிகள் பகர்ந்து, 'பார்மிசை
நெடிது உற நின் குலம்!' என நிகழ்த்தினான்.(13-25)
 
650.மற்றையர் அனைவரும் அருள் வழங்கவே
பொன்-திரள் மணி முடி புனைந்த போர்க் களிறு
உற்று, அடி வணங்கிட, உவந்து தாதையும்,
பெற்றனன் விடை கொடு, பெயர்ந்து போயினான்.(13-26)
 
651.இன்னணம் நிகழ்ந்தபின், இனிதின், எம்பிரான்
தன் நிகர் சேதுவை நோக்கி, தையலாள்
இன்னல் தீர்த்திட எழுந்தருள எண்ணினான்;
பின் அவண் நிகழ்ந்தமை பேசுவாம்அரோ.(13-27)
 
652.கேட்டலும், நளன் என்று ஓதும் கேடு இலாத் தச்சன்,
கேள்வி
வாட்டம் இல் சிந்தையான், தன் மனத்தினும் கடுகி,
வல்லே
நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாகக்
காட்டினன், மதிலினோடும் பாசறை, கடிதின் அம்மா!(14-1)
 
653.போயினன், அமலன் பாதம் பொருக்கென வணங்கி,
'இன்னே
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது, அமல!'
என்றான்;
நாயகன்தானும், வல்லே நோக்கினன் மகிழ்ந்து,
'நன்று!' என்று
ஏயினன், எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே.(16-1)