| 654. | அவ் வகை அறிந்து நின்ற வீடணன், அரியின் | |
| வீரர்க்கு | |
| ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத, | |
| செவ்விதின் மாயச் செய்கை தெளிந்திடுமாறு, தாமே | |
| கைவலியதனால் பற்றிக் கொண்டனர், கவியின் வீரர். | (25-1) |
| |
| 655. | என அவர் இயம்பக் கேட்ட இறைவனுக்கு, இலங்கை | |
| வேந்தன் | |
| தனது ஒரு தம்பி, 'அன்னோர் சாற்றிய வாய்மை | |
| மெய்யும் | |
| எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும், இன்னே | |
| காண்டி; | |
| நினைவதன்முன்னே விஞ்சை நீக்குவென்' என்று | |
| நேர்ந்தான். | (29-1) |
| |
| 656. | ஆங்கு அவர் புகலக் கேட்ட ஐயனும், அவரை நோக்கி, | |
| 'ஈங்கு இது கருமமாக எய்தினீர்என்னின், நீர் போய், | |
| தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே | |
| ஓங்கிய உவகை வார்த்தை உரையும்' என்று | |
| ஓதலுற்றான். | (32-1) |
| |
| 657. | இன்னவாறு இவர்தம்மை இங்கு ஏவிய | |
| மன்னர் மன்னவன் ஆய இராவணன் | |
| அன்ன போது அங்கு அளவு இல் அமைச்சரோடு | |
| உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம்: | (38-1) |
| |
| 658. | சொல்லும் மந்திரச் சாலையில், தூய் மதி | |
| நல் அமைச்சர், நவை அறு கேள்வியர், | |
| எல்லை இல்லவர் தங்களை நோக்கியே, | |
| அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான். | (41-1) |
| |
| 659. | 'ஈது எலாம் உரைத்து என் பயன்? இன்று போய்க் | |
| காதி, மானுடரோடு கவிக் குலம் | |