6115. | 'தொகை
நிலைக் குரங்குடை மனிதர்ச் சொல்லி |
|
என்? |
|
சிகை நிறச் சூலிதன் திறத்துச் செல்லினும், |
|
நகை உடைத்தாம்; அமர் செய்தல் நன்று' எனா, |
|
புகைநிறக்கண்ணனும் புகன்று, பொங்கினான். |
| |
| |
புகை நிறக் கண்ணனும்- மேல் குறிப்பிடப்பட்டவர்களேயன்றிப் புகைநிறக்
கண்ணன் (தூம்ராட்சன்) என்னும் அரக்கனும்; சிகை நிறச் சூலிதன்
திறத்துச் செல்லினும்- நம் தலைமுடி போல் சிவந்த நிறமுடையவனாய்த்
திரிசூலம் ஏந்திய சிவனை எதிர்த்துப் போர் செய்வதுகூட; நகை உடைத்தாம்-
நம் வீரப் பெருமை சிரிப்புக்கு இடமாகி விடும்; தொகை நிலைக் குரங்குடை-
கூட்டமான குரங்குப் படையைக் கொண்டுள்ள; மனிதர் சொல்லி என்-
மனிதர்கள் மேல் போர்செய்வது பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அமர்
செய்தல் நன்று- இப்போது வேறு வழி இல்லாமையால் அந்த
மனிதர்களோடு போர் செய்வதே நல்லது; எனாப் புகன்று - என்று சொல்லி;
பொங்கினான் - ஆத்திரத்தால் பொங்கினான். |
தூம அட்சன் - புகை நிறக் கண்ணன். சிவபிரானை எதிர்த்துப் போர்
செய்வதே தன் இனத்துக்குக் கேவலமாயிருக்க, குரங்குப் படை கொண்ட மனிதரோடு போர்
செய்ய வேண்டி வந்ததே என்பது புகை நிறக் கண்ணன் பொங்கியதற்குக் காரணம். |
(45) |
6116. | மற்று
அவன் பின்னுற, மற்றையோர்களும்,- |
|
'இற்றிதுவே நலம்; எண்ணம் மற்று இல்' என்று, |
|
உற்றன உற்றன உரைப்பது ஆயினார்- |
|
புற்று உறை அரவு எனப் புழுங்கு நெஞ்சினார். |
| |
| |
புற்று உறை அரவு என- புற்றில் வாழும் நாகப்பாம்பைப் போல;
புழுங்கும் நெஞ்சினார் - வெந்து புழுங்கும் மனம் உடையவரான;
மற்றையோர்களும் - மற்றும் உள்ள அரக்க வீரர்களும்; மற்று அவன் பின்
உற - அந்தத் தூம்ராட்சன் கூறிய பின்பு; இற்று இதுவே நலம்
- இத்தகைய இதுவே நன்மையாகும்; எண்ணம் மற்று இல் - வேறு நினைப்பதற்கு
எதுவுமில்லை; என்று உற்றன உற்றன - என்று அவரவர் கருத்தில்
தோன்றியவாறு; உரைப்பதாயினர்- பேசலாயினார்கள்: |