பக்கம் எண் :

38யுத்த காண்டம் 

தவத்தியை-இரங்காய், வன்தொழிலினாய் மறை துறந்து என்று
சிறை   வைத்தாய்   அன்று  அரக்கர் புகழ் அழிவதாயின என
இயையும் பல வகையாலும் புகழ் சேர்ந்தமையை 'ஆயின' என்ற
பன்மைச் சொல் குறித்தது.
  

ஒருவன்-இராமன் தவத்தி-சீதை. வன்தொழில்-வஞ்சனை செய்து
கவர்ந்த   செயல்   'மறை   துறந்து'   என்பதற்கு 'முறை துறந்து'
என்பது பாடமாயின் அரச நீதியை   விட்டு என்பது  பொருளாகும்.
இசை-புகழ். தீய செயலால் புகழ் பெற நினைப்பது   அறிவுடைமை
அன்று என்பது   கருத்து.   பொறுத்தல் - தாங்குதல்,   சுமத்தல்.
"எளிதென   இளில்லிறப்பான்   எய்தும்  எஞ்ஞான்றும் விளியாது
நிற்கும் பழி" (குறள் 145) இங்கு நினைவு கூரத்தக்கது.
 

(51)
 

6122.

'ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப்பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம கொற்றம்!
 

ஆசு இல் பரதாரம் அவை - ஒரு குற்றமும் இல்லாத வேறு
ஒருவன்  மனைவியை;  அஞ்சிறை   அடைப்பேம் -   அழகிய
சிறையிலே   அடைத்து  வைப்போம்; மாசு  இல்  புகழ் காதல்
உறுவேம்
- குற்றமற்ற  புகழ் அடையவும் விரும்புவோம்;வளமை
கூர
- பெருமை மிக;   பேசுவது  மானம் -   பேசுவதோ  வீர
உரைகள்;இடை பேணுவது காமம்- அதற்கிடையிலே விரும்புவது
காமம்;கூசுவது மானுடரை - அஞ்சுவது மானிடர்களைப் பார்த்து;
நம் கொற்றம் நன்று
- நமது வெற்றி நன்றாய் இருக்கிறது.
 

ஆசு, மாசு-என்பன குற்றம் என்ற பொருள் உடையவையாம்.
பரதாரம் - வேறு  ஒருவனது மனைவி. அம்சிறை-அழகிய சிறை.
சிறையின்   கொடுமையைக்  குறித்து நின்றது. 'பரதாரம்' அவை
எனப் பன்மையில் கூறியது.   பல  பெண்களை  விரும்பியவன்
என்பதைச் சுட்டிக் காட்டி நின்றது போலும்.  கொற்றம்-வெற்றி,
வீரமுமாம். 'நன்று' இகழ்ச்சி குறித்து நின்றது.
 

(52)
 

6123.

'சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்;
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி, மன்னா!
விட்டிடுதுமேல், எளியம் ஆதும்; அவர் வெல்ல,
பட்டிடுதுமேல், அதுவும் நன்று; பழி அன்றால்.