எடுத்தான்; நிரம்பிடுவது அன்று அதுவும் - இராமனது ஆற்றல் அத்துடன் நிறைவடைவது அல்ல;நின்றது இனி நம் பால் உரம் படுவதே - இனி மிகுந்திருப்பது நம்மிடம் உள்ள பலம் அழிந்து படுவதே;இதனின் மேல் உறுதி உண்டோ - இதற்கு மேல் நமக்கு ஒரு நன்மை உள்ளதோ? |
மரன்-மரம் (மகரத்துக்கு னகரம் போலியாக நின்றது) படர்தல்- அடர்ந்திருத்தல், மிக்கிருத்தலுமாம். ஒருவன்- இங்கு இராமன். களை கட்டான்-களை எடுத்தான். நெல்லுக்குப் புல் களையாதல் போலே, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் அசுரர் களை எனப்பட்டனர். |
(54) |
6125. | 'வென்றிடுவர் மானுடவரேனும், அவர்தம்மேல் |
| நின்று, இடைவிடாது நெறி சென்று, உற நெருக்கித் |
| தின்றிடுதல் செய்கிலம்எனின், செறுநரோடும் |
| ஒன்றிடுவர் தேவர்; உலகு ஏழும் உடன் ஒன்று ஆம். |
| |
வென்றிடுவர் மானுடவரேனும் - அந்த மானிடர்கள் வெற்றி பெறுவரென்றாலும்; அவர் தம் மேல் நின்று - அவர்கள் மேல் படை கொண்டு சென்று; இடைவிடாது நெறி சென்று - இடையில் விலகாமல் அவர்கள் வரும் வழியே சென்று; உற நெருக்கி - அவர்களை மிகவும் துன்புறுத்தி; தின்றிடுதல் செய்கிலம் எனின் - கொன்று தின்று விடுவதை நாம் செய்யவில்லை என்றால்;செறுநரோடும் - அந்தப் பகைவராகிய மனிதருடனே; தேவர் ஒன்றிடுவர் - தேவர்களும் சேர்ந்து விடுவார்கள்; உலகு ஏழும் - ஏழுலகத்தில் உள்ளவர்களும்;உடன் ஒன்று ஆம் - அவர்களோடு சேர்ந்து விடுவார்கள். |
மானுடவர்-மானிடர்; இங்கு ராம இலக்குவர். |
(55) |
| 6126. | 'ஊறு படை ஊறுவதன் முன்னம், ஒரு நாளே, |
| ஏறு கடல் ஏறி, நரர் வானரரை எல்லாம் |
| வேறு பெயராதவகை, வேரொடும் அடங்க |
| நூறுவதுவே கருமம்' என்பது நுவன்றான். |
| |
ஊறுபடை - அந்தப் பகைவர்களின் மிகுந்த படை; ஊறுவதன் முன்னம் - இங்குப் பெருகி வருவதற்கு முன்பே; ஒரு நாளே ஏறு கடல் ஏறி - ஒரே நாளில் இப்பெரிய கடலைக் கடந்து சென்று; நரர் வானரரை எல்லாம் - அந்த மனிதர்களையும், குரங்குப் |